நரகம் என்பது உல்லாசப் போக்கிடம் அல்ல

எலான் மஸ்க் (Elon Musk) என்பவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர், அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஒரு ட்விட்டர் செய்தியை வெளியிட்டார்: “நரகம் தான் எனக்கு இலக்கு என்றால்; நான் நரகத்திற்குச் செல்வது நல்லது. இதுவரை பிறந்த எல்லா மனிதர்களிலும் பெரும்பான்மையானவர்கள் அங்கே இருப்பார்களே".

1) சுற்றுலா?
எலான் மஸ்க்கின் கூற்று அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் தேவன் அன்பானவர், சர்வவல்லமையுள்ளவர், பரிசுத்தமானவர், இறையாண்மையுள்ளவர், இரக்கமுள்ளவர். பரிசுத்த தேவன் பாவத்தை தண்டிக்கிறார், அதில் சலுகையோ சமரசமோ கிடையாது. பாவத்திற்கான தண்டனை நித்திய நரகம்.  ஆனால் நரகம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க உயரடுக்கினர் சென்று வரும் உல்லாசமான இடமல்ல. 

2) சுய விருப்பமா அல்லது இலக்கா?
எலான் மஸ்க் தனது வாழ்க்கை மீதோ அல்லது அவரது வாழ்க்கைத் தெரிவுகள் மீதோ தனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதை புரிந்துகொள்கிறார்.  அவரைப் பொறுத்தவரை வாய்ப்புகள் அல்லது அதிர்ஷ்டம் அல்லது விதி அவரது வாழ்க்கையின் அறுதிஇறுதி ஆட்சியாளர். இதில் வருத்தம் என்னவெனில், தேவன் தன் சாயலில்  ஆவி, ஆத்மா மற்றும் சரீரம் என  தன்னை சிருஷ்டித்துள்ளார் என்பதை புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு தனிநபருக்கும் சுயமாக விருப்பம் கொள்ள அல்லது தெரிவு செய்ய சுதந்திரம் வழங்கப்படுகிறது.  மனிதர்கள் புரோகிராம் செய்யப்பட்ட ரோபோக்கள் அல்ல, ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுதந்திரமான மனிதர்கள்.  உண்மையில், தேவன் மக்களை நரகத்திற்கு அனுப்புவதில்லை.  உண்மையைச் சொல்லப்போனால் சத்தியமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிப்பதன் மூலம் மக்களே நரகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

3) நரகத்தில் பெரும்பான்மை?
மனிதகுலத்தின் பெரும்பான்மையினர் நரகத்தில் இருப்பார்கள் என்று எலான் மஸ்க் நினைக்கிறார். அது எதன் அடிப்படையில் அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. பெரும்பான்மையினர் நடந்து கொள்வதைப்போல் நானும் நடக்கிறேன் என்பதே ஒரு முட்டாள்தனமான தர்க்கமாகும். எலான் மஸ்க் கூட்டத்தில் ஆறுதல் தேடுகிறார். ஆக பெரும்பான்மையானவர்கள் சத்தியமற்றது மற்றும் அநீதியைத் தேர்ந்தெடுத்தால், அவரும் அவர்களுடன் செல்வார், இவராக சத்தியத்தைத் தேடவோ அறிந்து கொள்ளவோ, அதன் சார்பில் நிற்பதோ என எதுவும் இல்லை .

 4) வேதாகம உண்மை:
 நரகம் ஒரு உண்மையான இடம் என்றும் அது ஒரு அக்கினி கடல் என்றும் வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது (வெளிப்படுத்துதல் 19:20).   சாத்தானுக்கும் விழுந்துபோன தூதர்களுக்கும் நரகம் தயார் செய்யப்பட்டுள்ளது (மத்தேயு 25:41).  நரகம் என்பது வேதனையும், துன்பமும், பற்கடிப்பும் நிறைந்த இடம்.  நரகத்தில் இருக்கும் மக்கள் தங்கள் அடையாளத்தை (அவர்கள் யார்) அறிவார்கள், பூமியில் உள்ள வாழ்க்கையை நினைவில் கொள்வார்கள், பரலோகத்தில் உள்ள மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள், பேசுவார்கள் மற்றும் உணர்வார்கள் (லூக்கா 16:19-31). இருப்பினும், அது அர்த்தமற்ற நித்திய துன்பம்.

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றதன் மூலம் என் பெயர் ஜீவ புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?  (வெளிப்படுத்துதல் 20:15)

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download