தேவன் வேறு வேறு விதங்களில் பேசுகிறார்

லலிதா செல்லப்பாவின் (குயவனும் களிமண்ணும்) வாழ்க்கை வரலாற்றில், அந்த தம்பதியினரை மூழ்கடித்த ஒரு நெருக்கடியைப் பற்றி எழுதுகிறார்.  கடைசி முயற்சியாக செல்லப்பா அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயன்றார்.  அப்படி அவர் ​​சென்றபோது ரயில்வே பிளாட்பாரத்தில் அமர்ந்து ஒரு பிச்சைக்காரன் ஒரு அழகான கிறிஸ்தவப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டவர் அது தேவன் காட்டும் வழி என்று உணர்ந்தார், அவருடைய முயற்சி வெற்றியடைந்தது.  ஆம், எதிர்பாராத மனிதர்கள் மற்றும் சூழல்களில் இருந்து தேவன் நம்மிடம் பேசுகிறார். "தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே" (யோபு 33:14). 

கழுதை:
பிலேயாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தான். அதாவது தேவனுக்கு ஊழியம் செய்வதா அல்லது செல்வத்திற்கா?  சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை சபிப்பதற்காக பிலேயாமை அழைத்தான்; பாலாக்கின் வேண்டுகோள் தவிர்க்க முடியாததாக பிலேயாமிற்கு இருந்தது. இஸ்ரவேல் ஜனங்களைச் சபிப்பது தேவனின் சித்தமல்ல என்று பிலேயாம் நன்கு அறிந்திருந்தான். இருப்பினும், அவன் இரட்டை மனதாக இருந்தான்.  பாலக்குடனான உறவு பாதிக்கப்படாமல் இருக்க, தான் போகலாம் என்று நினைத்தான். அவனது தீய எண்ணத்தின்படியே அவன் செல்ல தேவன் அனுமதித்தாலும்; அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவர் அவனைக் கொன்றிருக்கலாம். ஆவிக்குரிய பார்வையற்ற பிலேயாம் தூதனானவரைப் பார்க்கவில்லை, கழுதையால் அவரைப் பார்க்க முடிந்தது, மரணத்திலிருந்து பிலேயாமைக் காப்பாற்றியது, அந்த செயல்பாட்டில் அவனது கால்கள் சுவரில் அழுத்தப்பட்டன.  அதனால் கோபத்தில் கழுதையை அடித்தான். தேவன் கழுதையின் வாயைத் திறந்தார், கழுதையால் பேச முடிந்தது (எண்ணாகமம் 22: 21-35). 

இஸ்ரவேல் அல்லாத ராஜா:
யோசியா யூதாவின் நல்ல ராஜாக்களில் ஒருவன், ஆனால் ஒரு யுத்தத்தில் மதியீனத்தின் நிமித்தம் இறந்தான். எகிப்தின்ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ்;  (வடக்கு சிரியா) கிமு 609 இல் அசீரியர்களுடன் கூட்டு சேர்ந்து பாபிலோனியர்களுக்கு எதிராக பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான்; அப்பொழுது நேகோ எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லியும் யோசியா அதை கேட்காமல், அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான் (2 நாளாகமம் 35:22). வீணாக யுத்தத்திலே மரித்துப் போனான். 

கனவும் தரிசனமும்:
தேவன் பவுலிடம் மக்கெதோனியாவிற்கு செல்லும்படி கட்டளையிட்டார், அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது (அப்போஸ்தலர் 16:6-10). ஒரு தரிசனத்தின் மூலம் கொரிந்து நகரில் தனது பணியைத் தொடர ஆண்டவர் ஊக்கப்படுத்தினார் (அப்போஸ்தலர் 18:9-10). 

 என்னோடு தேவன் பேச வேண்டுமே  என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download