கிறிஸ்துமஸ் அறிவொளி!

இந்த உலகில் தேவ குமாரன் பிறந்தது மனிதகுல வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்வு.  அப்போஸ்தலனாகிய யோவான் அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்; “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவான் 1:9).

மனிதகுலத்தின் அவலம்:
முதலாவது, மனிதர்கள் சுவிசேஷத்தை உணர்ந்து பெறாதபடி சாத்தான் அவர்களின் கண்களை குருடாக்கிவிட்டான்.  இரண்டாவது , உலகம் ஒரு அறிவுசார், தார்மீக மற்றும் ஆவிக்குரிய இருள் நிறைந்தது.  மேலும் மக்கள் யதார்த்தத்தைத் தேடுகிறார்கள்.  மூன்றாவது, முட்டாள்கள் இருக்கிறார்கள், அவர்கள் தேவன் இருப்பதை நிராகரிக்கிறார்கள் அல்லது தேவனின்  கட்டளைகளைப் புறக்கணிக்கிறார்கள்.  தேவனிடமிருந்து வெளிச்சம் இல்லையெனில், மனிதகுலம் அழிந்துவிடும்.

அறிவாற்றலின் அந்தகாரம்:
 மக்களுக்கு சத்தியம் தெரியாது.  பொய்க்குப் பிதா, சாத்தான் பொய்களைப் பரப்பியதால் உலகம் பொய்களால் நிரம்பியுள்ளது.  தேவனின் சத்தியம் அவருடைய படைப்பில் வெளிப்படுகிறது.  கண்ணுக்குத் தெரியாத பண்புகளான தேவ வல்லமை மற்றும் தெய்வீக இயல்பு (தேவத்துவம்) என இவற்றை உணரும் பகுத்தறிவு அவர்களிடம் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் உண்மையை பொய்யாக மாற்றுகிறார்கள்.  சத்தியத்தைப் பற்றிய இந்த அறியாமைக்கு மன்னிப்பு அல்ல, ஏனென்றால் அவை அழிந்துவிடும் (ரோமர் 1:20-25).  பொய்யான மதங்கள், கலாச்சாரம், மரபுகள், கட்டுக்கதைகள், இதிகாசங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி சத்தியம் மறைக்கப்படுகிறது.

தார்மீக அந்தகாரம்:
தேவனின் பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளும் பகுத்தறிவு மக்களுக்கு இல்லை.  எனவே, அவர்களுக்கு நீதியும், நியாயம் பற்றி தெரியாது.  எனவே, அவர்களின் தெரிவுகள் தவறானதாகவும் மற்றும் பிரயோஜனமற்றதாகவும் இருக்கிறது.  அவர்களுடைய நீதியான செயல்கள் கூட அழுக்கான கந்தையைப் போன்றது (ஏசாயா 64:6).  நினிவே நகர மக்களைப் போல இடது மற்றும் வலது, அதாவது சரி மற்றும் தவறு என்ற வித்தியாசத்தை சொல்ல முடியாத கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர் (யோனா 4:11).  துரதிர்ஷ்டவசமாக, பலர் தீமையை நல்லது என்றும் நன்மையை தீமை என்றும் சொல்லுகிறார்கள் (ஏசாயா 5:20).  மற்றவர்கள் இல்லாமை தத்துவத்தை நம்புகிறார்கள், எல்லாமே பூஜ்ஜியமாகிவிடும் அல்லது ஒன்றுமில்லாமல் ஆகி விடும். 

ஆவிக்குரிய அந்தகாரம்:
ஆதாம் மற்றும் ஏவாளின் வழித்தோன்றல்களாக மனிதர்கள் ஆவிக்குரிய ரீதியில் இறந்துவிட்டனர்.  தடைசெய்யப்பட்ட பழத்தை ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டபோது, தேவனுடனான அவர்களின் உறவு துண்டிக்கப்பட்டது.  தேவனுடன் இணைவதற்கான அவர்களின் ஆவிக்குரிய காரியங்களும் மரித்து விட்டது.  தேவ சாயலில் படைக்கப்பட்டாலும், பாவம் அவர்களைச் சிதைத்தது.  அந்த மரபு இந்த உலகில் பிறந்த அனைத்து தனி மனிதர்களுக்கும் செல்கிறது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த இருளை அகற்றி, தேவனுடன் மனிதர்களை ஒப்புரவாக்க வந்தார். ஆம், ஒப்புரவாக்குதலின் நற்செய்தி ஊழியம் மனிதகுலத்தின் மாபெரும் நம்பிக்கை. “இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்” (2 கொரிந்தியர் 5:18).

 சுவிசேஷத்தால் நான் அறிவொளி பெற்றேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download