ஆயி, ஆகான், மற்றும் தாக்கங்கள்

ஆயி பட்டணத்தைப் பார்க்கும்படி யோசுவா வேவுக்காரர்களை அனுப்பினார், அவர்கள் எரிகோ மீதான வெற்றியுடன் ஒப்பிடும்போது ஆயி பட்டணத்தைப் பிடிப்பது ஒரு விளையாட்டுக் காரியம் என நினைத்தானர்.  வேவுபார்த்து வந்தவர்கள், ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம் என்றனர். எனவே, 3000 பேர் அனுப்பப்பட்டனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். (யோசுவா 7:2-5) ஆகானைப் போலவே, சில விசுவாசிகள் உலகளாவிய அருட்பணிகளின் முன்னேற்றத்தில் தோல்வியை ஏற்படுத்துகிறார்கள்.

ஆகான்
எரிகோவை அழிவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் ஒன்றும் கொள்ளையடிக்கப்படக்கூடாது என்றும் தேவன் கட்டளையிட்டிருந்தார். ராகாபும் அவளுடைய குடும்பமும் மட்டுமே ஜீவனோடு விடப்பட்டனர்.  ஆனாலும், ஆகான் தனக்கென்று சிலவற்றை வைத்துக் கொள்ள முடிவு செய்தான். கண்டுபிடிக்கப்பட்டதும், அவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான். ஒரு தனி மனிதனின் இந்த பாவம் இஸ்ரவேலுக்குத் தோல்வியை ஏற்படுத்தியது.

விளைவுகள்
ஆயிக்கு எதிரான முதல் போரில், முப்பத்தாறு பேர் கொல்லப்பட்டனர். ஜனங்கள் திகிலடைந்தனர் அவர்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று. (யோசுவா 7:5)

தனிநபர் மற்றும் குடும்பம்:
எரிகோவிலிருந்து தடைசெய்யப்பட்டப் பொருட்களை பேராசையினாலும் பொருளாசையின் நிமித்தமும் எடுத்துக் கொண்டதால் ஆகான் சபிக்கப்பட்டான். அவன் நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டான்; பத்தாவது கட்டளை இச்சை என்கிற பாவத்திற்கு எதிராக எச்சரிக்கிறது. (யாத்திராகமம் 20:17) பணத்தின் மீதுள்ள ஆசைதான் எல்லாத் தீமைக்கும் அடிப்படைக் காரணம். (I தீமோத்தேயு 6:10) அவனும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தங்கள் பாவங்களுக்காக கொல்லப்பட்டனர். இவற்றை கூடாரத்தின் நடுவில் புதைத்ததால் குடும்ப உறுப்பினர்களும் பங்காளிகளானார்கள்.  (யோசுவா 7:21-26)

சமூகம் மற்றும் தேசம்
ஆகானின் பாவம் முழு தேசத்தின் மீதும் அவமானத்தையும் குற்றத்தையும் கொண்டு வந்தது. முதலில், அவர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டனர். இரண்டாவதாக, தவறு செய்யாத முப்பத்தாறு வீரர்கள் இறந்தனர். மூன்றாவதாக, பத்து மடங்கு அதிகமான முப்பதாயிரம் பேர் கொண்ட இராணுவத்தை அணிதிரட்ட வேண்டியிருந்தது, இதற்கு ஒரு பெரிய பொருட்செலவு தேவைப்படும்.

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் 
கர்த்தருக்கும் அவருடைய வார்த்தைக்கும் அடிபணியாமல் பிசாசை எதிர்த்து ஜெயிக்க முடியாது. (யாக்கோபு 4:7) யோசுவாவின் எச்சரிப்புக்கு ஆகான் செவிசாய்க்கவில்லை: “சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.” (யோசுவா 6:18)

கர்த்தரின் அருட்பணி வெற்றிக்கு நான் பங்களிப்பேனா அல்லது முன்னேற்றத்தைத் தடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download