ஆவிக்குரிய பயணம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்பதை விளக்க ஒரு உவமையைக் கற்பித்தார் (லூக்கா 11:5-8). இந்த உவமையில் மூன்று கதாபாத்திரங்கள் உள்ளன; பயணம் செய்து நண்பரின் வீட்டை அடைந்த விருந்தினர்;  பயணிக்கும் நண்பரை வரவேற்ற சிநேகிதன் ஆனால் அவனுக்கு வழங்க உணவு இல்லை;  தன் விருந்தினருக்குப் பணிவிடை செய்ய இரக்கத்துடன் வழங்கிய அருளாளனாகிய மற்றொரு சிநேகிதன். அனைவரும் நமது ஆவிக்குரிய பயணத்தை விருந்தினர்களாக தொடங்கி, புரவலர்களாக மாறி, அருளாளர்களாக முதிர்ச்சியடைகின்றனர்.

விருந்தினர்:
விருந்தினர் பயணம் செய்து சோர்வானதால் ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சி பெறவும் ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது  செல்லும் வழியில் தானே நண்பன் வீடு உள்ளது; சிறிது நேரம் அங்கு ஓய்வு எடுத்து விட்டு பின்பு பயணத்தை தொடங்கலாமே என நினைத்தவனாய் நண்பன் வீட்டில் அடைக்கலம் கொண்டான். ஆனால் போய் நின்ற நேரம் தான் சரியல்ல. ஆம், அவன் நள்ளிரவை அடைந்தான், அது ஒரு நண்பரைப் பார்க்க சிறந்த நேரம் அல்லவே.  மேலும் தன் நண்பனின் எதிர்பாராத வருகையைக் கண்டு அவன் நண்பன் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.  இப்படிதான் உலகில் பலர் சத்தியத்தைத் தேடி அலைந்து அலைந்து சோர்வடைந்த பயணிகளாக உள்ளனர்; விசுவாசிகள் இப்படி களைத்தவர்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் ஓய்வெடுக்க அழைக்கலாம் (மத்தேயு 11:28-30). 

விருந்தோம்புநர்:
விருந்தோம்புநர் நள்ளிரவிலும் தன் நண்பனை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தான். அவன் கதவைத் திறக்க அல்லது பதிலளிக்க மறுத்திருக்கலாம்.  ஆனால் அவனின் ஏற்றுக் கொள்ளும் பாங்கு மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் செய்யும் அவனது நற்குணத்தையும் காட்டுகிறது. ஆனால், அவன் தனது விருந்தினரை கவனிக்க ஏதுமில்லாமல் இருந்தது பரிதாபமே. விருந்தாளியை வெறும் வயிற்றில் தூங்க அனுமதிப்பது வெட்கக்கேடானது.  ஆக, இந்த புரவலன் ஒரு விருந்தோம்புநர் வீட்டிற்குச் சென்று அவமானத்தை அனுபவிக்கத் தயாராக இருந்தான்.  விசுவாசிகள் இத்தகைய வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களிடம் தேவையான வளங்கள் இல்லாவிட்டாலும், தேடுபவர்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் ஊழியம் செய்ய முடியும்.  விருந்தோம்புநர் மூன்று ரொட்டிகளின் தேவையை விரைவாக மதிப்பிட்டு, அருகில் இருக்கும் சிநேகிதன் வீட்டிற்குச் சென்று, அவனை எழுப்பினான்.

நன்மையாளர்:
ஒரே அறை உள்ள வீட்டில் மனைவி, குழந்தைகளை எழுப்பிவிட வேண்டி இருக்குமே என்பதால் அந்த சிநேகிதன் எழுந்திருக்க தயங்கினான்.  இருப்பினும், அனைத்து புரவலர்களுக்கும் தேவையானதை மட்டும் கொடுப்பதில் அவன் இரக்கம் காட்டினான்.  அநேகமாக, வெண்ணெய், ஜாம் மற்றும் முட்டைகளுடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரொட்டிகள் கொடுத்திருக்கலாம்..

 முன்னோக்கி நகர்தல்:
 நாம் அனைவரும் ஒரு விருந்தினரைப் போலத் தொடங்குகிறோம், ஆனால் விரைவில் பிறரை அழைக்கும் விருந்தோம்புநரகாவும் அவர்களுக்கு பயனாளிகளாகவும் மாற வேண்டும்.

 நான் விருந்தாளியா அல்லது விருந்தோம்புநரா அல்லது பயனாளியா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download