வானத்தைத் திறந்து கர்த்தர் ஆசீர்வதிப்பார்

ஆதியாகமம் 49:25 அவர் உயர வானத்தில் இருந்து உண்டாகும் ஆசீர்வா தங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், உன்னை ஆசீர்வதிப்பார்.
ஆதியாகமம் 26:5 நான் உன் (ஆபிரகாம்)  சந்ததியை வானத்தின் நட்சத்தி ரங்களைப் போலப் பெருகப்பண்ணி... யாவையும் தருவேன்
உபாகமம் 33:13 யோசேப்பைக் குறித்து: வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நிரூற்றுகளினாலும் தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக

1. வானத்தின் கதவைத் திறந்து ஆசீர்வதிப்பார்
(கர்த்தருடைய கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொண்டால்) 
யாத்திராகமம் 16:1-36 கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்தில் இருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்
சங்கீதம் 78:23-25 அவர் வானத்தின் கதவுகளைத் திறந்து மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 
நெகேமியா 9:15 அவர்கள் பசிக்கு வானத்தில் இருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையில் இருந்து தண்ணீர்... 
யோவான் 6:32-58 இயேசு: என் பிதாவோ வானத்தில் இருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் 

2. வானத்தின் பொக்கிஷசாலையைத் திறந்து ஆசீர்வதிப்பார்
(கர்த்தருடைய சத்தத்துக்கு உண்மையாய்ச் செவிகொடுத்தால்) 
உபாகமம் 28:1-14 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழைபெய்யவும் நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய (கருவூலம்) வானத்தைத் திறப்பார்; 
3. வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வதிப்பார்
(தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையில் கொண்டுவரும்போது) 
மல்கியா 3:1-18 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள் அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் (ஜன்னல், சாரளம்) திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download