அடையாளம்: தேவ ஆட்டுக்குட்டி

அடையாளம்: தேவ ஆட்டுக்குட்டி

தேவதூதன் ஒரு அடையாளம் கொடுத்தான். மேசியா; அபிஷேகம் செய்யப்பட்டவர்; கால்நடைகளின் தீவனத் தொட்டியில் பிறப்பார். வரலாற்றில் இப்படிப் பிறந்த ஒரே குழந்தை இயேசு கிறிஸ்துவாக தான் இருக்க முடியும். அவரை போர்த்தியிருந்த துணிகள், அவை ஒரு மூலையில் இருந்து குறுக்காக வரும் ஒரு நீளமான, கட்டு போன்ற துண்டு கொண்ட ஒரு சதுரத் துணியைக் கொண்டிருந்தன. குழந்தை முதலில் ஒரு சதுரத் துணியால் மூடப்பட்டிருந்தது, பின்னர் நீண்ட துண்டு அவரைச் சுற்றிலும் சுற்றியிருந்தது. இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான வரவேற்பு காத்திருக்கிறது? குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே பிரத்யேகமான (Just Born) கடைகளில் இருந்து பல பொருட்கள் வாங்கப்படுகின்றன.

குழந்தைகள் நன்றாக தூங்குவதற்கும், தங்களைத் தாங்களே கீறாமல் இருப்பதற்கும் மென்மையாக பொதிந்து வைக்கும் ஆடைகள் (swaddling clothes) பயன்படுத்தப்படுகின்றன. இதைக் குறித்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன.

முதலாவதாக, சுற்றி பொதிந்து வைத்த துணிகள் என்பது அவரது மரணம் மற்றும் அடக்கம் ஆகியவற்றைக் குறிக்கின்றது.  

இரண்டாவதாக, தாய்மார்கள் இஸ்ரவேல் பழங்குடியினரின் அடையாளங்களுடன் குழந்தையைச் சுற்றி வளைக்கும் பட்டைகளை உருவாக்குகிறார்கள். சிங்கம், ஆட்டுக்குட்டி அல்லது ஜீவ மரம் போன்ற யூதாவின் வம்சாவளியை மரியாள் பெற்றிருக்க முடியும், அதில் நீலம் மற்றும் வெள்ளை ஆகிய அரச நிறங்களால் நெய்யப்பட்ட அல்லது எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கலாம்.

மூன்றாவதாக, ஸ்வாட்லிங் துணிகளைப் பற்றி யோபில் குறிப்பிடப்பட்டுள்ளது; "மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்... " (யோபு 38:9). தேவக்குமாரன் மீது பிதாவின் அக்கறை வெளிப்படுகிறது. 

நான்காவதாக, கர்த்தர் எசேக்கியேல் மூலமாக இஸ்ரவேல் தேசத்திடம் பேசினார். தேசம் துணிகளால் சுற்றப்படாமல் கைவிடப்பட்ட குழந்தையைப் போல இருந்தது (எசேக்கியேல் 16:4). இதற்கு நேர்மாறாக, இங்கு குழந்தை இயேசு உரிமையாக, தழுவி, நேசிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறார்.

ஐந்தாவதாக, தேவதூதர்கள் தோன்றிய மேய்ப்பர்கள் "லேவிய மேய்ப்பர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வழக்கமாக பஸ்கா ஆட்டுக்குட்டிகளைப் பராமரித்தனர். இந்த மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டிகளைப் பாதுகாக்க ஸ்வாட்லிங் ஆடைகளைப் பயன்படுத்தினார்கள். குழந்தை இயேசு உண்மையில் 'தேவ ஆட்டுக்குட்டி’ என்பதற்கான அடையாளம் மேய்ப்பர்களுக்கு வழங்கப்பட்டது.

இரட்சகர் என் இதயத்திலும், ஆவியிலும், ஆத்துமாவிலும் பிறந்திருக்கிறாரா, அதற்கு என்ன அடையாளம்?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Rev. Dr. J .N. மனோகரன் Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download