ஆதியாகமம் 41:33-39

41:33 ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.
41:34 இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக.
41:35 அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக.
41:36 தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.
41:37 இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது.
41:38 அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
41:39 பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.




Related Topics



கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்-Rev. M. ARUL DOSS

நீதிமொழிகள் 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். 1கொரிந்தியர் 1:24,31 எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ...
Read More



ஆகையால் , விவேகமும் , ஞானமுமுள்ள , ஒரு , மனுஷனைத் , தேடி , அவனை , எகிப்து , தேசத்துக்கு , அதிகாரியாகப் , பார்வோன் , ஏற்படுத்துவாராக , ஆதியாகமம் 41:33 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 41 TAMIL BIBLE , ஆதியாகமம் 41 IN TAMIL , ஆதியாகமம் 41 33 IN TAMIL , ஆதியாகமம் 41 33 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 41 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 41 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 41 TAMIL BIBLE , Genesis 41 IN TAMIL , Genesis 41 33 IN TAMIL , Genesis 41 33 IN TAMIL BIBLE . Genesis 41 IN ENGLISH ,