சங்கீதம் 1

சங்கீதம் 1

1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

4 துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

6 கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

Related Topics/Devotions

புதுப்பித்தலின் மூலம் செயல்திறனும் பாதுகாப்பும் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு வியாபாரி மிக நவீனமான ஒர Read more...

சாபத்தின் ஆடை - Rev. Dr. J.N. Manokaran:

சிலர் பிறரைச் சபிக்கவும், த Read more...

இருதயமும் கண்களும் - Rev. Dr. J.N. Manokaran:

கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு ம Read more...

அவசரமாகப் பேசுதல் - Rev. Dr. J.N. Manokaran:


சங்கீதக்காரன் இவ்வா Read more...

மகத்தான விசுவாசிகள் - Rev. Dr. J.N. Manokaran:

சரியான பார்வை, நோக்கம், பேச Read more...

Related Bible References