எபேசியர் 1 - விளக்கவுரை

ஆவிக்குரிய சபை: பழைய சபையும் புதிய சபையும்


ஆவிக்குரிய சபை என்பது நேர்மறை பொருளை மாத்திரமல்ல எதிர்மறை பொருளையும் கொடுக்கிறது. அனைத்திற்கும் பின்பாக ஒரு ஆவி இயக்குகிறது. ஆவிக்குரிய இருள் - ஆவிக்குரிய ஒளி என இருவகை உண்டு. கிறிஸ்துவின் ஒளியினிடத்திற்கு வந்தவர்கள் ஆவிக்குரிய ஒளியாயிருக்கிறார்கள், வராதவர்கள் ஆவிக்குரிய இருளில் இருக்கிறார்கள். எபேசு திருச்சபை கிறிஸ்துவினிடத்திற்கு வருவதற்கு முன்பு ஆவிக்குரிய அந்தகாரத்தில் இருந்தது, வந்த பின்பு ஆவிக்குரிய ஒளியில் இருக்கிறது. ஆனாலும் ஒளியினிடத்திற்கு வந்தும் இருளை நேசித்து, சுவாசித்து, வாழ்ந்து வருவதைக்கண்ட பவுல் ஆவிக்குரிய பழைய சபையைப்பற்றியும் ஆவிக்குரிய புதிய சபையைப்பற்றியும் எழுதுகிறார். ஆவிக்குரிய புதிய சபை எப்படி இருக்கவேண்டும், அதன் தலைவர் முதல் அங்கத்தினர் வரை, அவரவர் பொறுப்புகளில் எப்படி கிறிஸ்துவின் ஒளிக்கு சாட்சியாக இருக்கவேண்டும் என்ற போதனைகளையும், அதற்கு எதிரிடையாக வரும் சவால்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்னும் நடைமுறை வழிகளையும் இந்நிருபத்தில் போதிக்கிறார்.


ஆவிக்குரிய தலைவன்: (1:1-2) ஆவிக்குரிய சபைத்தலைவனுக்கு ஆவிக்குரிய தலைப்பு (பெயர்) இருக்கவேண்டும் - அப்பெயர் தானே சூட்டிக்கொண்டதல்ல தேவனுடைய திட்டத்தினாலே வந்தது - அப்போஸ்தலனாகிய பவுல் - மேய்பனைப்போல் மந்தை – தன்னைப்பற்றிய தெளிவு. (கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆவிக்குரிய தலைவனின் தகுதிபெற்றவாகள்) யாரையும் வாழ்த்தும் கடமையும் தகுதியுமுடையவன். மந்தைக்காக தன்னையே இழக்க ஒப்புக்கொடுத்தவன். மந்தையை காக்கும் என்னமுடையவராய் எப்போதும் இருக்கிறார். அதற்கான திட்டத்தையும் வழிமுறைகளையும் வகுக்கிறார். தான் சிறையிலிருந்தாலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தன் மந்தையை போஷிக்க கடிதங்கள் வாயிலாக ஊழியத்தை நிறைவேற்றுகிறார்(4:1). ஆவிக்குறியவனுக்கு ஊழியத்தை தடைசெய்வது ஏதுமில்லை.


ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்: (1:3-14) இது நமது தகுதியினால் வருவதல்ல ஆண்டவரின் ஈவு.  எங்கே? - உன்னதங்களில் - யாருக்குள்? - கிறிஸ்துவுக்குள் - எவ்வளவு? - சகல ஆசீர்வாதங்களும் - எப்போது? -ஆசீர்வதித்திருக்கிறார் (எப்போதும் ஆயத்தமாக). என்னென்ன? 1. தெரிந்துகொண்டார் – எப்போது? – உலகதோற்றத்திற்கு முன்பே – ஏன்? – அன்பில் பரிசுத்தம் குற்றமில்லாமலிருக்க 2. முன்குறித்தார் – ஏன? கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக – சுவிகாரபுத்திரராகும்படி 3. பாவமன்னிப்பாகிய மீட்பு – ஏன்? பெருக வேண்டும் 4. இரகசியத்தை அறிவித்தார் – எது? – பரலோகத்திலுள்ளவைகளும் ப10லோகத்திலுள்ளவைகளும் (சகலமும்) கூட்டப்படவேண்டும் - கடவுளின் மகிமைக்கு புகழ்ச்சியாக இருக்க 5. பரிசுத்த ஆவியில் முத்திரைப்போடப்பட்டீர்கள் - நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.


ஆவிக்குரிய பிரார்த்தனை: (1:15-19) ஆவிக்குரியவர்கள் செய்யும் ஜெபம். ஆவிக்குரிய ஜெயத்திற்கான ஜெபம். ஆவிக்குரிய பிரார்த்தனையில் துதி நிறைந்திருக்க வேண்டும் - துதியில் புது நாமங்களை கடவுளுக்கு சூட்டக்கூடிய அனுபவம் பெற்றிருத்தல் (பரலோகத்திலும் ப10லோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமக்காரணாகிய இயேசு 3:14) ஜெபக்குறிப்பை நன்கு சேகரித்திருக்க வேண்டும். ஆவிக்குரிய காரியங்களுக்காக ஜெபித்தல். எப்போதும் ஜெபிக்க வேண்டும் - நினைவுகள் ஆசைகள பகிர்ந்துகொள்ளுதல், சித்தம் கொள்ளுதல் போன்றவை பிரார்த்தனைகளாக ஏற்கப்படுகிறது. 1. கடவுளை அறிந்துகொள்வதற்கான ஞானம் தெளிவு பெற 2. அழைக்கப்ட்டவர்களின் நம்பிக்கையை அறிய 3. பரிசுத்தவான்களிடம் கடவுள் சுதந்திரம் பெறும்போது அதன் மகிமையின் ஐசுவரியம் அறிய 4. உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்க 5. தேவையான அறிவுகளைப்பெற பிரகாசமுள்ள மனக்கண்கள் பெற. (3:14-19) 6. உள்ளான மனுஷனில் வல்லமையையாய் பலப்படவும் 7. விசுவாசத்தினாலே கிறிஸ்து இருதயங்களில் வாசமாயிருக்கவும் (அடையாளத்தில் அல்ல கற்பனையிலும் அல்ல மாறாக அன்பு என்னும் உருவத்தில்) 8. அறிவுக்கெட்டாத அன்பை பிறரோடு பகிர்ந்துக்கொண்டு அதன் முழுமையை ஆராய்ந்து அனுபவிக்க 9. தேவனுடைய முழநிறைவை அடையவும் (சகல துவங்களையும் அறிந்து அனுபதித்து அவைகள் நம்மில் இருக்க அதாவது நாம் ஒரு ஆலயமாக இருக்க) 


ஆவிக்குரிய (கடவுளின்) திட்டம்: (1:20-23) 1. எக்காலத்திலும் எல்லோருக்குள்ளும் இயேசுவே உயர்ந்திருக்க – நிலையான தலைவராயிருக்க 2. எல்லாம் அவருக்கு கீழ்படிந்திருக்க 3. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பப்பட.



Topics: Ephesians Tamil Reference Bible Rev. Dr. C. Rajasekaran

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download