தேவனின் பணியில் பெண்கள்

1960 ஆம் ஆண்டில், ஹெலன் பெய்லி, ப்ரெஸ்டன் நிறுவனம், மேரி லூயிஸ் ஸ்லேட்டர் மற்றும் ரூத் தர்மண்ட் ஆகியோர், டெக்கான் பகுதியில் உள்ள போதகர்களின் மனைவிகள், பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், பெண் தொழிலாளர்கள் மற்றும் தாய்மார்களின் ஆவிக்குரிய வளர்ச்சியின் அவசியத்தை அறிந்தனர்.  ஹனம்கொண்டா சபையில் நடந்த முதல் கூட்டத்திற்கு அவர்களை அழைத்தார்கள்.  இவ்வாறு, டெக்கான் பாப்டிஸ்ட் பெண்கள் சங்கம் (DBWA) தேவனுடைய வார்த்தைகளை வளர்ப்பதற்கும், தேறுவதற்கும், அதிகாரமளிப்பதற்கும், அருட்பணியில் பெண்களை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டது.  எழுபது வருடங்களுக்குப் பிறகும் தரிசனம் தொடர்கிறது.  அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ண முடியும்? (சகரியா 4:10). ஆசீர்வாதமான தலைமுறைகளைக் கொண்ட, தேவ பயம் உள்ள இந்த பெண்களிடமிருந்து தலைமைத்துவம் தோன்றியது.

நோக்கத்துடன் கூடிய ஐக்கியம்:
சூசன் தேவதாஸ் என்ற பெண் குருவானவர் தனது குழுவினருடன் இணைந்து, இந்தியாவின் காசிப்பேட்டையில் உள்ள கார்மல் பாப்டிஸ்ட் திருச்சபையில் வைத்து இந்த பெண்களுக்காக மூன்று நாள் (5-7 ஜனவரி 2023) தரிசன மாநாட்டைத் திட்டமிட்டார்.  மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.  சமூக வேதாகம படிப்பின் சர்வதேச பாடத்திட்டத்தைப் (Community Bible Study International) பயன்படுத்தி இந்த பெண்கள் தங்கள் ஐக்கியங்களில் வேதாகமத்தைப் படிக்கிறார்கள்.

தரிசனம்:
ஒரு நாள் முழுவதும், அதாவது ஜனவரி 6 ஆம் தேதி மாநாட்டில் கலந்துகொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட போதகர்களை அவர்கள் அழைத்தனர்.  பெண்கள் சபைகளின் ஆவிக்குரிய நலனில் அக்கறை கொண்டிருந்தனர்.  அவர்கள் தங்கள் ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினர்.  காரணம், இந்த போதகர்கள் சமூக வேதாகம படிப்பு போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் வேதாகம பாட புத்தகங்களைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும்; அது மாத்திரமல்ல போதகர்கள் தங்கள் சபையிலுள்ள ஆண்கள், பெண்கள், குடும்பங்கள், அவர்களின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே.

பரோபகாரம்:
ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பெண்கள் 100-க்கும் மேற்பட்ட போதகர்களுக்கு ரூ.1000 மும் மற்றும் கழுத்தில் அணியும் டை பரிசாக வழங்கினார்கள். இதற்காக 100,000 ரூபாய்களுக்கு மேல் இந்தப் பெண்களால் திரட்டப்பட்டது. அனைவரும் தேவனுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் பெண்களால் தியாகமாக வழங்கப்பட்டது.

 உத்வேகமான மற்றும் மாதிரியான  பெண் சீஷர்கள்:
 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் லூக்காவின் நற்செய்தியின்படி பெண் சீஷர்களால் நன்கு கவனிக்கப்பட்டனர்;  அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னாள் மற்றும் சூசன்னா போன்றோர் ஆவர் (லூக்கா 8:1-3). இந்தப் பெண் சீஷர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பன்னிருவருக்கும், அவர்கள் தங்குவதற்கு இடத்தை ஆயத்தம் செய்வது மற்றும் பொருட்களை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ததாக நம்பப்படுகிறது.

 முன்னுரிமை:
இந்த பெண்கள் தேவ ராஜ்யத்தை முதலில் தேடுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் மற்றும் மற்றவர்களுடன் தங்கள் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ள தாராள மனப்பான்மையுடன் இருக்கிறார்கள் (மத்தேயு 6:33).

 மற்றவர்களை ஆசீர்வதிக்கும் தரிசனம் எனக்கு உண்டா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download