சபை எப்படி இருக்க வேண்டும்?

உள்ளூர் சபைகள் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (ஆழ்மனதின்) சரீரத்தின் வெளிப்பாடு.  உள்ளூர் அளவில் உள்ள சபைகள் எப்படி இருக்க வேண்டும் அல்லது செயல்பட வேண்டும்?

  1) வளர்:
எருசலேம் சபைகள் ஒரு ஆற்றல்மிக்க இயக்கமாக இருந்தது, இதில் 3000 மற்றும் 5000 வரை புதிய விசுவாசிகள் சபைகளில் சேர்க்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 2:41; 4:4). ஒவ்வொரு நாளும் புதிய விசுவாசிகள் சபைகளில் சேர்க்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 2:47). எண்ணிக்கையில் பெருகுவதும் ஆவிக்குரிய பக்குவத்தில் வளர்வதும் எல்லா சபைகளுக்கும் இன்றியமையாதது.  வளர்ந்து வரும் சபையில் விசுவாசிகள் என்பவர்கள் சாட்சிகள், சத்தியத்தைத் தேடுபவர்கள் அதில் ஈர்க்கப்படுகிறார்கள், தேவன் அவர்களை சபையில் சேர்க்கிறார்.  இன்று, எண்ணிக்கையில் வளரும் சபையில் உள்ளன, ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையின் அடிப்படையில் தேங்கி நிற்கின்றன.

2) செல்:
எருசலேமிலிருந்து வெகு தொலைவில் உள்ள அந்தியோகியா நகரில் இருந்த சபை நல்ல மாற்றங்களைப் பெற்ற சபையாக இருந்தது. சபையிலுள்ள ஐந்து தலைவர்களும் வெவ்வேறு பின்னணியில் உள்ளவர்கள், மேலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா என்ற மூன்று அறியப்பட்ட கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். ரோமானியப் பேரரசின் புதிய பகுதிகளுக்கு மிஷனரிகளாக அனுப்பப்பட பர்னபாவையும் பவுலையும் பிரிக்கும்படி தேவன் தலைவர்களிடம் பேசினார் (அப்போஸ்தலர் 13:1,2). நல்ல வளர்ந்து வரும் சபை தான் மிஷனரியாக செல்லும் சபையாகவும் இருக்கும். தங்கள் பழகிய அல்லது உள்ளூருக்குள்ளே மாத்திரம் சுவிசேஷத்தில் ஈடுபடுவது மட்டும் போதாது, அதற்கும் அப்பால் உள்ள பிராந்தியங்களில் ஈடுபட வேண்டும், சுற்றியுள்ள இடங்களுக்கும் செல்ல வேண்டும். அந்தியோகியா சபை  தங்கள் சாட்சிகள் மூலம் மற்றவர்கள் மனதில் பதியுமளவு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டுள்ளது (அப்போஸ்தலர் 11:26). இன்று பல சபைகள் அந்தியோகியா சபையைப் போல அருட்பணிகளில் ஈடுபடுவதில்லை.

 3) கொடு:
மக்கெதோனிய சபையின் சிறப்புத்தன்மை அவர்கள் உதாரத்துவமாய் கொடுப்பதாகும்.  பிலிப்பு, தெசலோனிக்கே மற்றும் பெரோயா போன்ற நகரங்கள் அமைந்துள்ள கிரேக்கத்தின் வடக்குப் பகுதியாக மக்கெதோனியா இருந்தது.  ரோமானியர்கள் அலெக்சாண்டரின் தாயகத்தை கைப்பற்றியபோது அப்பகுதியின் அனைத்து செல்வங்களையும் எடுத்துக் கொண்டனர். கொரிந்து கிரீஸ்க்கு தெற்கே இருந்த அகாயா. சபை விசுவாசிகள் ஏழைகளாக இருந்தபோதிலும் கொடுப்பதில் சிறந்தவர்கள் எனவே பவுல்  "அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்" என்று  அவர்களின் தாராள மனப்பான்மையைப் பற்றி கொரிந்து விசுவாசிகளிடம் கூறினார் (2 கொரிந்தியர் 8:1-15). அவர்களின் தாராள மனப்பான்மை என்பது ஆண்டவரிடம் அவர்களுக்கு இருந்த நன்றியுள்ள இதயத்தை வெளிப்படுத்தியது.

 எனது சபை வளர்வதிலும், அருட்பணிக்கு செல்வதிலும் மற்றும் கொடுப்பதிலும் சிறந்து விளங்கும் சபையா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download