சுவர்கள் மற்றும் வாசல்கள்

பண்டைய காலங்களில், ஒரு நகரம் வலுவான, உறுதியான மற்றும் உயரமான சுவர்களால், பெரிய வாசல்களுடன் பாதுகாக்கப்பட்டது.  வாசல்களைத் திறக்க அல்லது மூடுவதற்கு சில வீரர்கள் தேவைப்படும்.  பலமான சுவர்கள் மற்றும் வாசல்கள் இருந்தாலும், எதிரிகள் அத்துமீறல்கள் மூலமாகவோ அல்லது காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தோ உள்ளே வரலாம்.  நெகேமியா 52 நாட்களில் எருசலேம் சுவர்களைக் கட்டினார் மற்றும் பத்து வாசல்களை மறுசீரமைத்தார் (நெகேமியா 3). சார்லஸ் எச் ஸ்பர்ஜன் வாசல்களின் பெயர்கள் பரிசுத்த ஆவியால் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபரின் ஆவிக்குரிய பயணத்தை சுட்டிக்காட்டுவதாக கூறுகிறார்.

 1.ஆட்டு வாசல்:
 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே வாசல் (யோவான் 10:9). ஒரு நபரின் ஆவிக்குரிய பயணம் இந்த வாசலில் நுழைவதன் மூலம் தொடங்குகிறது.

 2.மீன் வாசல்:
 ஒரு விசுவாசி தன்னை ஜீவ பலியாக அர்ப்பணித்து தேவனுக்குச் சேவை செய்ய அழைக்கப்படுகிறார்.

 3.பழைய வாசல்:
 பழைய வாசல் தேவனின் மாறாத கட்டளைகளையும் அவருடைய நித்திய வழிகளையும் குறிக்கிறது (சங்கீதம் 19:9-11).

 4.பள்ளத்தாக்கு வாசல்:
 தேவனைப் பின்பற்றுபவர்கள் தாழ்மையானவர்கள் மற்றும் சிகரங்களை வெல்வதற்காக பள்ளத்தாக்குகள் வழியாக நடந்து செல்கிறார்கள்.

 5.குப்பை மேட்டு வாசல்:
 ஒரு சீஷன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும்.  புறக்கணிப்பு, அலட்சியம், சோம்பல், மந்தம் போன்ற பாவங்களால் மாசு ஏற்படுகிறது.

  6. நீரூற்று வாசல்:
  இது ஆவியில் நடப்பதன் மூலம் புதுப்பித்தல் மற்றும் புத்துயிர் பெறுவதைச் சுட்டிக்காட்டுகிறது (கலாத்தியர் 5:16-17).

 7.தண்ணீர் வாசல்:
 தினமும் தேவனுடைய வார்த்தையை தியானிப்பதன் மூலம் மூழ்கி, நிரப்பப்பட்டு, புதுப்பிக்கப்படுதல் ஆகும் (சங்கீதம் 1:1-3).

 8.குதிரை வாசல்:
 ஒரு விசுவாசி இந்த பூமியில் வாழும் வரை, ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடுவான்.  நமது போராட்டமும் யுத்தங்களும் சாத்தான் மற்றும் அவனுடைய பொல்லாத ஆவிகளின் ஆதிக்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிரானது (எபேசியர் 6:12).

 9.கிழக்கு வாசல்:
 யூத மேசியா எருசலேமிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக 1540-41ல் ஒலிவ மலையை எதிர்கொள்ளும் கிழக்கு வாசல் சுலைமான் தி மாக்னிஃபிசென்ட்டால் மூடப்பட்டது.  இது 500 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது;  இது எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்று வேதாகம அறிஞர்கள் நினைக்கிறார்கள் (எசேக்கியேல் 44:1-2). கர்த்தர் வரும்போது வாசல் திறக்கப்படும். 

  10.  மிப்காத் வாசல்:
  இது தீர்ப்பு பற்றியது.  விசுவாசிகள் கண்டிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கை, மரபு மற்றும் பணி ஆகியவை அக்கினியால் சோதிக்கப்படும் (1 கொரிந்தியர் 3:13).‌ நித்திய பலன்களைக் கொடுக்கும் பணிகளைச் செய்வது அவசியம்.

  நான் என்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் சரியான திசையில் இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download