பிரயோஜனமற்ற ஊழியக்காரனே

ஒரு தலைமைத்துவ கருத்தரங்கில், எந்த தலைப்பு பொருத்தமானது என்பதை அறிய ஒரு நபர்  விரும்பினார்.  போதகர், மூத்த போதகர், பிஷப், மேற்பார்வையாளர், குருவானவர், அருட்தந்தை, பெரியவர்…இப்படி பல.  வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட தலைப்பு என்னவென்றால், 'பிரயோஜனமற்ற' அல்லது ‘தகுதியற்ற’ வேலைக்காரன்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு சுவாரஸ்யமான உவமையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.  ஒரு வேலைக்காரன் வயலில் கடினமாக உழைத்து விட்டு வீடு திரும்பி வருகிறான், வந்தவுடன் அவனது எஜமான் வீட்டில் அமர்ந்து கொண்டு, வேலைக்காரனிடம் இரவு உணவைத் தயாரிக்கவும், பரிமாறவும், சுத்தம் செய்யவும் கட்டளையிடுகிறான்;  பின்னர் எஜமானன் சென்று குளித்து தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு சாப்பிட்டு விட்டு ஓய்வும் எடுக்கிறான். எஜமானன் வேலைக்காரனுக்கு நன்றி சொல்லவே இல்லை. அதைதான் இயேசு, "நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்" என்று சொல்லுங்கள் என்றார் (லூக்கா 17:10).

ஆம்,  நம் வாழ்க்கை, அறிவு, ஞானம், திறன்கள், திறமைகள், தாலந்துகள், திறன்கள், வளங்கள் மற்றும் வாய்ப்புகள் அனைத்தும் தேவனால் வழங்கப்படுகின்றன, எனவே, நாம்' பிரயோஜனமற்ற அல்லது லாபமற்ற ஊழியர்கள் மற்றும் நாம் எதைச் செய்தாலும் அது நம் கடமையின் நிமித்தமே செய்கிறோம்.   எனவே, எந்தவொரு வெகுமதியையும் அங்கீகாரத்தையும் நாம் கோர முடியாது.

இப்படியிருப்பின், நாம் நம்  ‘கடமையை’ சரியாகச் செய்கிறோமா?  தாலந்துகளைப் பற்றிய உவமையில், ஐந்து தாலந்துகளைப் பெற்ற நபர் அதைப் பெருக்கி பத்து தாலந்துகளாக மாற்றினார்.  ஒருவேளை அவர் எட்டு அல்லது ஒன்பது திறமைகளை மட்டுமே செய்திருந்தால்?! அவர் தனது ‘கடமையை’ முழுமையாகவோ அல்லது பூரணமாகவோ செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.  ஒரு தாலந்து பெற்ற நபர் ஒருவேளை 1.2 அல்லது 1.5 தாலந்தை  கொண்டுவந்திருந்தால் எஜமானனிடம் பாராட்டைப் பெற்றிருப்பாரா?   நிச்சயமாக, அவர் ஏதாவது செய்ய முயற்சித்திருந்தாலும், அது மிகவும் வெற்றிகரமாக இருந்திருக்காது.  கர்த்தர் ஒரு அநீதியான மற்றும் ஒரு பொல்லாத  பணியை  சுமத்தும் நபரல்ல.  நம்முடைய நீதியுள்ள கர்த்தரைப் பற்றி ஏசாயா கூறுவது எனனவெனில், 'அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்' (ஏசாயா 42:3).

 பவுல் தனது முப்பது  கால ஊழியத்திற்குப் பிறகு, அவர் ஏற்கனவே ‘அதை’ அடைந்துவிட்டதாகக் கருதவில்லை, ஆனால் அவருடைய அழைப்பையும் நோக்கத்தையும் மிக உயர்ந்த, சிறந்த முறையில் நிறைவேற்றவே முயற்சிப்பதாக சொல்கிறார்.

பவுலைப் போலவே நாமும் எதைச் செய்தாலும் முழுமையாகவும்  சிறப்பானதாகவும் இருக்கும்படி செய்ய முயற்சிக்க வேண்டும், பிரயாசப்பட வேண்டும்.

நாம் 'அப்பிரயோஜனமான வேலைக்காரன்' என்ற உணர்வோடு கூட எனக்களிக்கப்பட்ட கடமையை உண்மையோடு செய்கின்றேனா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download