முறுக்கப்பட்ட வில்

ரத்த அழுத்தத்தை சோதிக்கும் மின்னணு பரிசோதனை உபகரணத்தில்  கோளாறு ஏற்பட்டது. அந்த உபகரணத்தின்  மூலம்  தன் இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்த நபர், எல்லாம் நேர்த்தியாக  இருப்பதாகக் கருதினார்.  ஒரு நாள் காலை நேரம் அவர் திடீரென்று மயங்கி விழுந்தார், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  மருத்துவர்கள் சோதித்து பார்த்து விட்டு அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைக் கண்டனர்; ஆக  தவறான உபகரணங்களால் தவறாக வழிநடத்தப்பட்டார்.

இஸ்ரவேல் தேசம், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள், அவர்கள் தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப் போலிருக்கிறார்கள் (சங்கீதம் 78:57; ஓசியா 7:16). பண்டைய காலங்களில் முக்கியமாக வேட்டையாடுவதற்காக வில்லும் அம்புகளும் பயன்படுத்தப்பட்டன.  பிற்காலத்தில் அது போர் ஆயுதமாகவும் மாறியது. வில் அம்புகளுக்கு வலுவான அடித்தளமாக அல்லது வலுவான பலகையாக இருக்க வேண்டும்.

எய்பவர்:
வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணை பின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணை விடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின் நிலையாற்றல், அம்பின் திசைவேகமாக மாறும்.  நவீன வில்லில் இலக்கை நோக்கும் வகையில் ஒரு சாளரம் உள்ளது.  இஸ்ரவேல் தேச ஜனங்கள் எப்போதும் வழுக்குபவர்களாகவும் வழிதவறிச் செல்லும் ஆடுகளைப் போலவும் இருக்கிறார்கள் (ஏசாயா 53:6). வில் அம்பைப் பொறுத்த வரையில்  வழு வழுப்பாக இருந்தால், இலக்கை குறிவைப்பது சாத்தியமில்லை.

தண்டு:
வில்லின் அடிப்படைக் கூறில், இரு வளைந்த  இழுபடக்கூடிய கிளைகளை  இணைக்கும் வகையில் தண்டு இருக்கும், பாரம்பரியமாக மரத்தில் செய்யப்படும். அவை சரியாக பொருந்தவில்லை என்றால், வில்லுக்கு எந்த பயனும் இல்லை.  நாணை பின்னிழுப்பதன் மூலம், வில்லாளி அமுக்குவிசையை கிளைகளின் உட்புறத்திலும், இழுவிசையை கிளைகளின் வெளிப்புறத்திலும் ஒரே வேளையில் செலுத்துகிறார். நாணை இழுத்துப் பிடிக்கையில் சேமிக்கப்படும் ஆற்றல், அம்பை எய்கையில் வெளிப்படுக்கிறது.  இஸ்ரவேல் தேசம் தண்டு பிடியில் உறுதியாக இணைக்கப்படாத மற்றும் சரங்களைப் பிடிக்க முடியாமல்  உடைந்ததைப் போல இருந்தது.

சரம்:
தண்டுப்பகுதியை, வில்லாளி வில்லை பிடிக்கும் இடமான பிடி, அம்பு மனை மற்றும் காண்குழி என பிரிக்கலாம். அம்பு மனை என்பது, குறி வைக்கையில்அம்பைத் தாங்க, பிடிக்கு மேலுள்ள ஒரு சிறு விளிம்பு. தண்டின் பிடிக்கு மேலுள்ள, அம்பு மனையைக் கொண்ட பகுதியை காண்குழி என்பர்.  தளர்வான சரங்கள் அல்லது அம்புகளை எய்ய முடியாத இணைக்கப்படாத சரங்களைப் போல இஸ்ரவேல் ஆயத்தமாக இல்லை.  அவர்கள் தேவனுடைய வார்த்தையுடன் பிணைக்கப்படாததால் அவர்கள் ஆயத்தமாக இல்லை.

 அம்புகள்:
 அம்புகள் நேராக இருக்க வேண்டும், கூர்மையான அம்புக்குறிகள் இலக்கை தாக்க வேண்டும்.  முறுக்கப்பட்ட அம்புகள் அல்லது சிதைந்த அம்புக்குறிகள் இலக்கைத் தாக்காது.

தேவன் தனது பணிக்காக வஞ்சகமான வில்லை பயன்படுத்த முடியாது.  இஸ்ரவேல் தேசத்தை போல உள்ளூர் சபை ஒரு வஞ்சகமான வில்லாக மாறக்கூடும்.

  நான் தேவனின் கையில் பயனுள்ள வில்லாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download