உறவுகளின் முன்னுரிமை

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கோவிட் 19 கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, ​​அவரது வீட்டிலிருந்து, அவரின் மூன்று வயது மகள், 'மம்மி' என்று அழைத்து அவரின் கவனத்தை ஈர்த்தாள்.  பிரதமர் மன்னிப்பு கேட்டு அப்பிள்ளையின் அழைப்பிற்கு செவிமடுத்தாள். ஆம், அரசு விவகாரங்கள் கூட காத்திருக்கும் ஆனால் குழந்தைகள் இருப்பார்களா! (என்டிடிவி நவம்பர் 11, 2021).  குழந்தைகளுடனான பெற்றோரின் உறவு அனைத்து மனித உறவுகளிலும் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவே தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் உறவு. தேவன் தம்முடைய விசுவாசமுள்ள பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஒரு முன்னுரிமையான உறவு இதுவாகும்.

 1) அவருடைய பிள்ளையாக இருக்கும் உரிமை:
தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, பாவங்களைக் கைவிட முடிவுசெய்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்கள் தேவ பிள்ளைகளாக மாறுவார்கள். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12). மனித அரசாங்கங்களால் பூமிக்குரிய குடியுரிமையையும், உயிருடன் இருக்கும்போது அடிப்படை உரிமைகளையும் மட்டுமே கொடுக்க முடியும்.  தேவ பிள்ளைகளாக இருப்பதற்கு தேவன் நமக்கு நித்திய ஆவிக்குரிய உரிமைகளை வழங்க முடியும்.

2) அப்பா பிதாவே என்று அழைக்கும் உரிமை:
பவுல் நமக்கு பயம் அல்லது அடிமைத்தனத்தின் ஆவி வழங்கப்படவில்லை, மாறாக "அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" (ரோமர் 8:15) என்கிறார். அதாவது வெறுமனே உதடுகளிலிருந்து அப்பா என்றழைப்பதல்ல, தத்துப் பிள்ளையல்ல. ஆம், "நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்" (கலாத்தியர் 4:6). 

3) இணை வாரிசுகள்:
பரம்பரை இல்லாமல் குழந்தைகள்  இருப்பதில்லை.  தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் இணை வாரிசுகள் என்று தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்" (ரோமர் 8:17)

4) மகிமை:
முதல் ஜோடி ஆதாம் ஏவாளால் இழந்த மகிமையை தேவன் நமக்குத் தருகிறார்  (யோவான் 17:22; ரோமர் 3:23)

5) ஐசுவரியம்:
கிறிஸ்துவில் மனித புரிதலுக்கும் விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட மாபெரும் நித்திய ஐசுவரியங்கள் நம்மிடம் உள்ளன (2 கொரிந்தியர் 8:9). 

6) நீதி:
தேவ பிள்ளைகளாகிய நாம் நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறோம். "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்" (ரோமர் 8:33). நாம் குற்றவாளிகள் அல்ல, ஆனால் நீதிமான்கள், பரிசுத்தர்கள் மற்றும் குற்றமற்றவர்கள் என்று ஒரு அறிவிப்பு.

 7) ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு:
நாம் கூப்பிடும்போது பதிலளிப்பதாக தேவன் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.  இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும், எந்த சூழ்நிலையிலும் தேவனை அடையும் ‘ஹாட் லைன்’ போன்றது (எரேமியா 33:3). 

தேவனின் உலகளாவிய நித்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பது ஒரு பெரிய, மகத்தான பாக்கியம்.

நித்தியமான தேவன் என் பிதா என்பதை நான் அறிகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download