முள் என்னும் பரிசு

ஒரு தோட்டத்தில் மெல்லிய காற்று வீசும் போதெல்லாம் ஒரு இனிய வாசனை பரவுகிறது. அதனைப் பற்றி தோட்டக்காரர் கூறும்போது; ஒவ்வொரு முறை தென்றல் காற்று வீசும்போதும், முட்கள் பூவின் இதழில் ஊடுருவி, மணம் தரும்.  முள் பூக்களிலிருந்து சிறந்ததைக் கொண்டுவருகிறது.  பவுல் கூட தனது சரீரத்தில் இருக்கும் ஒரு முள்ளைப் பற்றி எழுதுகிறார் (2 கொரிந்தியர் 12:7).

 முட்கள்:
 மனித வீழ்ச்சியால் முள்ளும் குருக்கும் உலகில் தோன்றின (ஆதியாகமம் 3:18). முட்கள் ஒரு செடியை நெரித்து, காய்க்காமல் செய்யலாம் (மத்தேயு 13:7). மிருகங்களைக் கட்டுப்படுத்தும் கம்பத்தில் ஒரு முள் இருந்தது.  பொல்லாத மனித குலத்தால் ஆண்டவர் இயேசுவின் தலையில் முள் கிரீடம் அணிவிக்கப்பட்டது (மத்தேயு 27:29).

சரீரத்தில் ஒரு முள்:
சரீரத்தில் உள்ள முள் என்பது வியாதியாக இருக்கலாம், ஆனால் அது பவுலை விரக்தியடையச் செய்வதாகவும் மற்றும் எரிச்சலூட்டுவதாகவும் அல்லது நெருடலாகவும் காணப்பட்டது.  அது பவுலை சக்தியற்றதாக இருந்தாலும் வலுவிழக்கச் செய்தது.  அபூரண உலகில், நோய்கள், வியாதிகள் மற்றும் வலிகள் அனைவருக்கும் பொதுவானவை.  விசுவாசிகளும் இத்தகைய துன்பத்தை அனுபவிக்கலாம்.  பவுல் போன்ற பெரிய அப்போஸ்தலர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

வரமா?  
இருப்பினும், சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளை பவுல் வரமாக பார்த்தார், அதாவது, ஒரு பரிசு.  பவுல் அதை சாத்தானின் உபத்திரவமாகவோ அல்லது தாக்குதலாகவோ பார்க்க மறுத்து, தேவையில்லாமல் சாத்தானின் பெயரை உபயோகிப்பதை தவிர்த்தார். மாறாக, நல்ல தேவனின் ஈவாக அதை ஏற்றுக்கொண்டார்.  ஆயினும்கூட, சாத்தான் இந்த முள்ளைப் பயன்படுத்தி பவுலைத் தாக்கும் அளவுக்கு தந்திரமாக இருந்தான்.

 பணிவு:
 பெரும்பாலான மனிதர்கள் அனுபவிக்கும் வாய்ப்போ அல்லது பாக்கியமோ இல்லாத மாபெரும் தரிசனத்தைப் பற்றி பவுல் எழுதுகிறார்.  அந்தச் சூழலில், அவரைத் தாழ்மையுடன் வைத்திருக்க தேவன் கொடுத்த வரம் என அதைப் பற்றி எழுதுகிறார்.  பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஆவிக்குரிய அனுபவம் அவரைப் பெருமைப்படுத்தக்கூடும், மேலும் பவுல் ஒரு மனிதர், தாழ்மையாக தான் இருக்க வேண்டும் என்பதை பவுலுக்கு நினைவூட்ட தேவன் பவுலின் சரீரத்தில் ஒரு முள்ளை அனுமதித்தார்.

 வலி:
 முதலில் , முள் சரீரத்தில் வலியை உருவாக்கியது.  இரண்டாவது , இது உணர்வு சார்ந்த வலி, மன அழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்தியது.  மூன்றாவதாக , அது மன வலி, பவுலைத் தாக்க முட்கள் பயன்படுத்தப்பட்டது.  நான்காவதாக , பவுலின் ஜெபத்திற்கு பதில் கிடைக்காததால், அது ஆவிக்குரிய வலியை ஏற்படுத்தியது.

 தேவக் கிருபை:
 மாம்சத்தில் உள்ள முள்ளுக்கு மருந்தே தேவனின் கிருபையாகும், இக்கிருபை தீராதது, கிடைக்கக்கூடியது, போதுமானது, மேலும் அவரது மனித பலவீனத்தில் தேவனின் பலம் பூரணமாய் விளங்கும்.

 எனது ஆவிக்குரிய வளர்ச்சிக்கான ஒரு வரமாக நான் துன்பங்களை கருதுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download