ராகாபின் விசுவாசம்

பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் விசுவாசத்தின் கொள்கை எப்போதும் செயல்பாட்டிலே உள்ளது.  யெகோவா மீதான விசுவாசத்தை வெளிப்படுத்திய முதல் கானானியப் பெண் ராகாப், பின்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் அவளுக்கு ஒரு இடமும் கிடைத்தது.  மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதியுள்ளவளாக்கப்பட்டாள் என்று யாக்கோபு பாராட்டியுள்ளாரே (யாக்கோபு 2:24-26). ராகாப் ஒற்றர்களை விசுவாசத்தினாலே வரவேற்று, அவர்களைப் பாதுகாத்து, புத்திசாலித்தனமாக வேறொரு திசையில் அனுப்புகிறாள்.  பின்னர் அவள் தனது வீட்டை இஸ்ரவேலர்கள் அடையாளம் காணும்படியாக தனது வீட்டின் ஜன்னலில் ஒரு சிவப்பு நூலைக் கட்டுகிறாள் (யோசுவா 2:17). ராகாப் ஒரு சத்திரத்தின் (ஹோட்டல்) உரிமையாளராக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் ஜோசபஸ் குறிப்பிடுகிறார்.

ராகாபின் விசுவாச அறிக்கைதான் நம் கவனத்திற்குரியது.  ஆம், அவர் விசுவாசக் குடும்பங்களின் பட்டியலான எபிரேயர் பதினொன்றாம் அத்தியாயத்தில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளாரே. 

1) இறையாண்மையுள்ள தேவன்:

அந்தக் காலத்திலுள்ள பெரும்பாலான மக்கள், தெய்வங்கள் அல்லது தேவர்கள் அல்லது தேவிகள் என்று எண்ணப்படுபவை ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அடங்குபவை என்று அவற்றை நினைத்துக்கொண்டு வணங்கிய போதிலும்  ராகாபால்  பிதாவாகிய தேவனை வானத்தின் மற்றும் பூமியின் கடவுளாகவும் மனுக்குலத்தை ஆளுபவராகவும் காண முடிந்தது.  எனவே, உண்மையான தேவனை நம்ப அவள் விரும்பினாள். 

2) வல்லமையுள்ள தேவன்:

செங்கடலை வற்றிப்போகப் பண்ணினதின் மூலம் இஸ்ரவேலருடைய தேவனின் வல்லமையான விடுதலையைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டதாக ராகாப் கூறுகிறாள்.  சர்வவல்லமையுள்ள தேவன், தம் மக்களுக்காக அற்புதமான செயல்களைச் செய்யக்கூடியவர் என்ற விஷயம் கர்த்தருடைய மகத்தான வல்லமையையும் புரிந்துகொள்ள அவளுக்கு உதவியது.

3) வாக்குத்தத்தின் தேவன்:

இஸ்ரவேலருக்கு கானான் தேசத்தை அளிப்பதாக தேவன் வாக்குறுதி அளித்திருந்ததை ராகாப்  புரிந்துகொண்டிருந்தாள். மேலும் தேவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்றும் அவள் சொன்னாள்.  அவளுடைய விசுவாசம் முணுமுணுக்கும் மற்றும் சந்தேகிக்கும் இஸ்ரவேலருக்கு மத்தியில் தனித்து நின்றது.

4) தேவனுக்கு பயம்:

ராகாப்பும் தேசத்திலுள்ள மற்றவர்களைப் போலவே பயந்தாள்,  இருப்பினும், இந்த பயம் அவளை உண்மையான தேவன் மீதான விசுவாசத்திற்கு இழுத்துச் சென்றது (யோசுவா 2: 9-14). இன்றும் தேவனுக்கு  ‘பயப்படுகிற’ ஆனால் தேவனை ‘நம்பாத’ பலர் இருக்கிறார்கள்.

எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டபோது, ராகாபும் அவளுடைய குடும்பமும் காப்பாற்றப்பட்டனர் (யோசுவா 6:25).  யூதாவின் சந்ததியும் போவாஸின் தாயுமான சல்மோனை ராகாப் மணந்தாள்  (மத்தேயு 1: 1-5).  ஒற்றர்களுக்கு நட்புரீதியான வரவேற்பு அளித்த ஒருவராக ராகாப் விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றாள் (எபிரேயர் 11:31).

எனது விசுவாசத்தின் அடிப்படை என்ன? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download