மேய்ப்பர்களுடைய கூடாரங்கள்

"ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு" (உன்னதப்பாட்டு 1:8).

"ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு", என்று சூலேமித்தியாளிடம் எருசலேமின் குமாரத்திகள் வேண்டுதல் செய்கிறார்கள். கறுப்பாயிருக்கும் சூலேமித்தியாளை ஸ்திரீகளில் ரூபவதி என்று வர்ணிக்கிறார்கள். இன்று நமது கிறிஸ்தவ உலகத்தில் மற்ற தேவப்பிள்ளைகளின் அழகற்ற நிலையையும், குறைகளையும் மிகைப்படுத்தி அவர்களின் நல்ல குணாதிசயங்களையும் நல்ல கிரியைகளையும் பாராட்டாமல் இருக்கிறோம்! மணவாளனின் மந்தையை தேடி காணும்படியான பாதையை அறியாத மணவாட்டி செய்யவேண்டியது என்னவெனில், தன் தோழிகளின் மூலம் தேவ மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் போய் தன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடவேண்டும். ஆட்டுக்குட்டிகள் என்றால் தனது ஆவிக்குரிய பிள்ளைகளாகும். இன்று உங்களிடமுள்ள பெரிய குறை என்னவெனில் உங்களது ஆட்டுக்குட்டிகளை மற்ற மேய்ப்பர்களுடைய கூடாரங்களின் அருகாமையில் விட்டுவிட தயங்குகிறீர்கள்? மற்ற சபை மேய்ப்பர்களும் இந்த மேய்ப்பர்களுடைய கூடாரங்களில் இருக்கின்றார்கள். கண்களால் காணாத கிறிஸ்துவின் சபையானது உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. சகல வல்லமையுள்ள எங்கும் பரவியிருக்கும் தேவனை ஒரு உள்ளூர் சபைக்குள் அடைத்து விட முடியாது.

மற்ற சபை மேய்ப்பர்களை கள்ள போதர்களென்று தீர்த்துவிடாதே! அவர்கள் நீங்கள் நம்பும் சில தத்துவங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கக்கூடும். நீங்கள் மூலைக்கல்லாயிருக்கும் கிறிஸ்துவின் மேல் உங்கள் சபையை கட்டாமல் சில தத்துவங்கள் மேல் உங்களின் சபையை கட்டியிருக்கிறீர்கள். அந்த மேய்ப்பர்கள் கர்த்தரின் படைப்பு, இரட்சிப்பின் திட்டம், கிறிஸ்துவின் கன்னியின் வயிற்றில் பிறந்தல், தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டல், கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் இரட்சிப்பு , கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை. சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், நித்ய ஜீவன், பரிசுத்தாவியானவரின் ஆள்தத்துவம், பரிசுத்தாவியானவரின் ஊழியம், ஒரே கிறிஸ்துவின் சரீரமாகிய உலகமெங்கும் வியாபிக்கும் சபை, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, மரித்தவர்களின் சரீர உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு, நரகம், பரலோகம் போன்ற சாத்தியங்களை ஏற்றுக்கொண்ட எந்த போதகரும் இந்த மேய்ப்பர்களுடைய கூடாரங்களில் இருக்கிறார்கள், சில மிக முக்கியமில்லாத கொள்கைகளில் நீங்கள் அவர்களிடமிருந்து வேறுபாடுகள் இருக்கலாம்.

உங்களின் சில மிக முக்கியமில்லாத உபதேசங்களான ரகசிய வருகை, முழுக்கு ஞானஸ்னானம், அந்நிய பாஷை போன்றவைகளின் மூலம் கிறிஸ்துவின் ஒரே சரீரத்தை வெட்டிக் கூறு போடவேண்டாம், நீங்கள் பெற்ற பரிசுத்தவாதியானவரின் ஆவிக்குரிய அனுபவங்கள் மற்ற தேவப் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் இருக்கலாம். "கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே" ( I கொரிந்தியர் 12.:6). "......எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு..." ( I கொரிந்தியர் 12:13). ஆவிக்குரிய அனுபவங்களில் வித்தியாசம் உண்டு. "வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே". ( I கொரிந்தியர் 12::4,5). உங்களுக்கு கிடைத்த அந்நிய பாஷை பேசும் வரமோ, அனுபவமோ மற்ற தேவப்பிள்ளைகளுக்கு கிடைத்திருக்காது. ஆனால் கர்த்தர் ஒருவரே!

கள்ள உபதேசியர்கள் யாரென்றால் மேல கூறப்பட்ட மிக முக்கியமான அடிப்படை கொள்கைகளை அல்லது விசுவாச பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான். இந்த கள்ள உபதேசியர்கள் மேய்ப்பர்களுடைய கூடாரங்களில் காணப்படமாட்டார்கள். ஆகவே முக்கியமில்லாத கொள்கை வித்தியாசத்தினால் கிறிஸ்துவின் ஒரே சரீரத்தை வெட்டிக்கூறு போடவேண்டாம்!



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download