இயேசு ஒருவரே கடவுள் அவதாரமா? அவதாரங்களில் ஒருவரா?

“கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்” என்ற ஆசையும் எதிர்ப்பார்ப்பும் மனிதர்களிடையே நீண்ட காலமாக இருந்த ஒன்று. அதற்கு காரணம் கடவுள் மனிதனாகப் பிறப்பார் என்று அவரே மனிதர்க்கு வெளிப்படுத்தியிருந்தார் என்பது பைபிள் நமக்குப் போதிக்கிறது. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பே ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகள் அவருடைய மனிதப் பிறப்பை “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இ;ம்மானுவேல் என்று பேரிடுவாள்.” ஏன்றனர் (ஏசாயா 7:14). நமக்கு ஒரு பாலகனாகவும், குமாரனாகவும், கர்த்தராகவும், அதிசயமானவராகவும், ஆலோசனைக் கர்த்தாவாக, சர்வவல்லமையுள்ள கடவுளாக, நித்திய பிதாவாக, சமாதானப்பிரபுவாக இயேசுவை ஏசாயா அறிமுகப்படுத்துகிறார் (ஏசாயா 9:6). 

உலகில் கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்ற ஆவல் மற்றும் எதிர்ப்பார்ப்பால் அநேகர் தங்களை கடவுளின் மனுஅவதாரம் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அசாத்தியமான காரியங்களை செய்த இறைப்பணியாளர்களை மக்கள் கடவுளின் மனுஅவதாரங்கள் என்று நம்பி அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். கடவுளை கண்களால் காணவேண்டும், கண்டு நம்ப வேண்டும், அவருக்கும் எனக்கும் ஒரு எதார்த்தமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற தேவை மனிதர்களிடையே வளர்ந்துகொண்டிருந்தபோது கடவுள் மனிதனாக அவதாரம் எடுத்தார். கடவுள் மனிதனாக அவதாரம் எடுத்ததை மூன்று முக்கிய ஆதாரங்கள் உறுதிசெய்கிறது. முதலாவது கன்னி பிறப்பு, இரண்டாவது கடவுளையும் மனிதர்களையும் பிரித்த பாவம் அதனால் ஏற்பட்ட சாபத்தை நீக்க குற்றமற்ற இரத்தம் சிந்தப்படவேண்டும் என்னும் இறைநீதி நிறைவேற வேண்டும். மூன்றாவது பலியானவர் பலியின் நிறைவேற்றத்திற்கு அடையாளமாக மீண்டும் உயிர் பெறவேண்டும். அதாவது உருவத்தில் வெளிப்படாத அருவமான கடவுள் உருவத்தில் தனித்துவமான முறையில் அதாவது கன்னி பிறப்பில் பிறக்கவேண்டும், உருவத்தில் வந்த கடவுளே உலகின் பாவங்களுக்காக பலியாக வேண்டும் அதன் பின்பு அவர் அருஉருவாகி மீண்டும் அருவாக மறையவேண்டும் என்னும் இறைத்திட்டமும் நீதியும் நிறைவேறவேண்டும். 

இப்படியாக கடவுளின் மனுஅவதாரத்தை மேற்கண்ட மூன்றாலும் வரலாற்றில் உறுதிசெய்தவர் இயேசு மாத்திரமே. கடவுள் அவதாரம் என்று சொல்லிக்கொள்கிற அல்லது அழைக்கப்படுகிற எவரும் கன்னி பிறப்பையோ, அல்லது உலக பாவத்திற்கான பலியாகவோ அல்லது பலி நிறைவேற்றத்தின் அடையாளமாக மீண்டும் உயிர் பெற்றதாகவோ, இறுதியில் அருவாக மறைந்து போனதை உலக வரலாற்றில் இயேசுவைத்தவிர வேறு எங்கும் காணமுடியாது – கேட்கமுடியாது. இந்தியா போன்ற நாடுகளில் சைவ மற்றும் வைணவ சமயங்களில் கடவுள் மனுஅவதாரம் எடுத்து தீமைகளை வென்று, மீண்டும் உயிர்பெற்று மீண்டும் அருவாகி மறைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆகவே இந்தியாவில் தங்களை இறைஅவதாரம் என்று சொல்லிக்கொள்கிற எவரும் மெய்யாகவே இறைஅவதாரங்கள் இல்லை, அவர்கள் இறைப்பணியாளர்களாக இருக்கலாம். இறைப்பணியாளர்கள் இறைவனைப்போல அரும்பெருங்காரியங்களை செய்வதால் அவர்களை இறைவன் என்று உரிமைக்கோருவதை கடவுள் பொருத்துக்கொள்ளமாட்டார். அவர்கள் அந்திக் கடவுள். அவருடைய ஸ்தானத்தை அல்லது மகிமையை யாருடனும் பகிர்ந்துகொள்ளமாட்டார், யாருடைய ஸ்தானத்தையும் அல்லது மகிமையையும் அவர் எடுத்துக்கொள்வதற்கு அவருக்கு அவசியமும் இல்லை. இயேசு மனுஅவதாரங்களில் ஒருவரா அல்லது அவரே ஒரு மனுஅவதாரமா என்ற கேள்விக்கு இயேசுவைத்தவிர வேறுயாரும் மனுஅவதாரங்கள் அல்ல. மற்றவர்கள் போலிகள் என்பதை உறுதிபடசொல்லமுடியும். அதற்கான வரலாறு பைபிள் மாத்திரமே.

Author. Rev. Dr. C. Rajasekaran



Topics: Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download