இரட்சகர், கிறிஸ்து மற்றும் ஆண்டவர்

இரட்சகர், கிறிஸ்து மற்றும் ஆண்டவர் 

பாதிப்படையக் கூடிய குழந்தை என்பது சாதாரண ஒரு குழந்தை அல்ல, ஆனால் அக்குழந்தை ஒரு இரட்சகர், கிறிஸ்து மற்றும் ஆண்டவர். இரட்சகர் என்ற சொல்லுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கான உலகப் பணி என்று பொருள். விசுவாசிகள் அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்காக, அவர் மனிதகுலத்தின் பாவங்களுக்காக மரித்து விட வேண்டும். கல்வாரி சிலுவையில் அவர் மரிப்பதின் மூலம் பாவ மன்னிப்பு உள்ளது. மேலும் இரட்சகர் மனிதகுலத்திற்கு சமாதானத்தையும் தேவனுக்கு மகிமையையும் கொண்டுவருகிறார். ‘கிறிஸ்து’ என்ற தலைப்புக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று பொருள். இஸ்ரவேலர்கள் மேசியாவை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவை எதிர்பார்த்தனர். பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள், ராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் அபிஷேகம் செய்யப்பட்டனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த எல்லா காரியங்களையும் தேவனுடைய குமாரனாகக் கடந்து செல்கிறார். அவர் கர்த்தாதி கர்த்தர், ராஜாதி ராஜா, அனைத்து மனிதகுலம் மற்றும் பரலோகத்தின் மீதும் முழுமையான அதிகாரம் கொண்டவர். 

அடையாளம்
தேவதூதன் ஒரு அடையாளம் கொடுத்தான். மேசியா; அபிஷேகம் செய்யப்பட்டவர்; கால்நடைகளின் தீவனத் தொட்டியில் பிறப்பார். வரலாற்றில் இப்படிப் பிறந்த ஒரே குழந்தை இயேசு கிறிஸ்துவாக தான் இருக்க முடியும். அவரை போர்த்தியிருந்த ஆடைகள், அவை ஒரு மூலையில் இருந்து குறுக்காக வரும் ஒரு நீளமான, கட்டு போன்ற துண்டு கொண்ட ஒரு சதுரத் துணியைக் கொண்டிருந்தன. குழந்தை முதலில் ஒரு சதுரத் துணியால் மூடப்பட்டிருந்தது, பின்னர் நீண்ட துண்டு அவரைச் சுற்றிலும் சுற்றியிருந்தது. இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான வரவேற்பு காத்திருக்கிறது? குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே பிரத்யேகமான (துரளவ டீழசn) கடைகளில் இருந்து பல பொருட்கள் வாங்கப்படுகின்றன.

மேய்ப்பர்கள் எதிர்கொண்ட விதம் 

1. வியப்பு:  
அவர்கள் இச்செய்தியைப் பற்றி அறிந்ததும் வியப்படைந்தனர் அல்லது ஆச்சரியப்பட்டனர். அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (2:10). மேய்ப்பர்கள் தேவதூதரின் செய்திக்குக் கீழ்ப்படிந்து பெத்லகேமுக்கு விரைந்தனர். இன்று கிறிஸ்துமஸ் செய்தியும் அப்படித்தான்; கர்த்தராகிய இயேசுவிடம் வருவதற்கான அழைப்பு; அவரே இரட்சகர், கிறிஸ்து மற்றும் ஆண்டவர் என்று ஏற்றுக் கொண்டு அவரிடம் ஓடி வர தேவன் அழைக்கிறார். 

2. தொழுது கொள்ளல்:  
மேய்ப்பர்கள் தொழுவத்தை அடைந்து புதிதாகப் பிறந்த ராஜாவைக் கண்டுபிடித்து அவரை வணங்கினர். அவர் ஒருவரே தொழுது கொள்ள தகுதியானவர். இன்று, நாம் அவருக்கு முன்பாக மண்டியிட்டு, அவரே இரட்சகர், கிறிஸ்து மற்றும் கர்த்தர் என்று நம் நாவுகளால் அறிக்கையிட அழைக்கப்பட்டுள்ளோம்.

3. சாட்சி:  
மேய்ப்பர்கள் செய்திகளையும் அனுபவத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர் (லூக்கா 2:17). அவர்கள் வார்த்தையை பரப்பினார்கள்.

உண்மையான தேவபக்தி என்பது சத்தியத்தை அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் தெய்வம் என தேடி கண்டுபிடிப்பதாகும். அவரைப் பணிந்து வணங்குதல் மற்றும் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதும் மற்றும் சாட்சியமளிப்பதுமாகும். கிறிஸ்துமஸ் உண்மையான தேவபக்தியை குடும்பத்திற்குள் கொண்டு வருகிறது.

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Rev. Dr. J .N. மனோகரன் Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download