வல்லமையும் சத்தியமும்

குணமாக்கப்பட்ட சப்பாணி:
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்தவனை பவுல் குணமாக்கினதைக் கண்ட ஜனங்கள்; தங்கள் குரலை உயர்த்தி, தேவர்கள் மனுஷரூபமெடுத்து வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியில் சொன்னார்கள். மேலும் பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுலை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். அடடா ஒரு ஊனமுற்ற மனிதன் திடீரென்று எழுந்த நடக்கிறானே என்று ஆச்சரியப்பட்டு, குணமாக்கப்பட்ட அந்த அற்புதத்தைக் கண்டு அது அவர்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அல்லவா அழைத்துச் சென்றிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக பவுலும் பர்னபாவும் தங்கள் தெய்வங்கள் என்று நம்பும் படியாக அக்காரியம் அவர்களை தவறாக வழிநடத்தியது. வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்புகிறவரும், நல்லவரும், உண்மையானவரும் எனக் கூறி சத்திய தேவனின் பக்கமாய் பவுல் அந்த ஜனங்களை இழுக்க முயன்றார். இன்னும், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யூப்பித்தரும் அல்ல, மெர்க்கூரியும் அல்ல; உண்மையான தெய்வத்தையே வணங்க வேண்டும் என்று பவுல் குறிப்பிட்டார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:8-18).

விரியன் பாம்பிடமிருந்து பாதுகாப்பு:
பெரிய அப்போஸ்தலனாகிய பவுல் மால்டா தீவில் மற்றவர்களுடன் சேர்ந்து நெருப்புக்கு விறகு எடுக்குமளவு பணிவுடன் இருந்தார். அப்படி பவுல் சில விறகுகளை வாரி அந்தநெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவருடைய கையைக் கவ்விக்கொண்டது. பவுல் கலங்கவில்லை. அவர் கத்தவும் இல்லை, பயப்படவும் இல்லை. அவர் எவ்வித பதட்டமும் இன்றி கையை உதறினார், பாம்பு நெருப்புக்குள் விழுந்தது.  உள்ளூர் மக்கள் பவுல் ஒரு குற்றவாளி (கொலைபாதகன்) என்று நினைத்தார்கள், அவர் கப்பல் விபத்தில் இருந்து தப்பித்தாலும், அவர் தண்டிக்கப்பட்டார் என்று எண்ணினார்கள். இருப்பினும், பவுல் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார், அவர் இறந்து போகவில்லை. உடனடியாக உள்ளூர் மக்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, பவுலை ஒரு கடவுள் என்று நினைத்தார்கள் (அப்போஸ்தலர் 28:3-6). அட, மனித மனம் ஒரு குரங்கு தான் போல; ஒரு சிந்தனையிலிருந்து இன்னொரு கருத்திற்கு சடுதியாக தாவுகின்றதே.. 

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அற்புதங்கள்:
இரண்டு அற்புதங்களும் தேவ வல்லமையின் வெளிப்பாடாக இருந்தன: ஒரு வியத்தகு சிகிச்சைமுறை மற்றும் ஒரு விஷ பாம்பிலிருந்து ஒரு அற்புதமான பாதுகாப்பு.  ஆசீர்வாதத்தின் வாய்க்காலான பவுலைக் கடவுள் என்று மக்கள் அடையாளப்படுத்தினார்கள்.  அவர்கள் வல்லமையின் ஆதாரமான சத்திய தேவனைத் தேடத் தவறிவிட்டனர்.  பவுலின் பிரசங்கமும், அவர் எவ்வளவோ நயந்து சொல்லியும் அது பலனளிக்கவில்லை.

தேவனின் தெய்வீக குணங்கள்:
தேவன் இயல்பாக தன்னை ஒரு வல்லமையான வழியில் வெளிப்படுத்தியுள்ளார். "எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை" (ரோமர் 1:20).

ஏமாற்றப்பட்டது:
மக்கள் அதிகார வெறி கொண்டவர்களாக இருக்கும்போது, அதன் மூலத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.  அவர்கள் தேவ வல்லமையின் ஆதாரங்களை வியாழன் அல்லது செவ்வாய் போன்ற பொருள்களாகப் மிகைப் படுத்துகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் எந்த காரணமும் இல்லாமல் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பது வருந்தத்தக்கதே.

நான் உண்மையான ஜீவனுள்ள தேவனை அறிந்ததைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download