சிந்தப்பட்ட இரத்தம்

“தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்” (லேவியராகமம் 4:6).  ஏழு என்ற எண் முழுமையைக் குறிக்கிறது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஏழு வெவ்வேறு இடங்களில் சிந்தியது, அது மீட்பதற்கான ஒரு தீர்க்கதரிசன செயல்பாடு.

 1) கெத்செமனே தோட்டம்:
 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேதனையோடும் வியாகுலத்தோடும் ஜெபித்தார், அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையில் விழுந்தது (லூக்கா 22:44). ஏதேன் தோட்டத்தில் ஆதாம் பாவம் செய்தான், இரண்டாவது ஆதாம் தேவ  கோபாக்கினையை பாவிகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொண்டார்.

 2) அவரது முகத்தில்:
 படைவீரர்கள் அவர் கன்னத்தில் அடித்து, தாடைமயிரைப் பிடுங்கி, அவர் மீது துப்பினார்கள் (ஏசாயா 50:6). அது அவமானமாகவும் மோசமாக நடத்தப்பட்டதாகவும் இருந்தது.  ஒருவரின் கண்ணியத்தை அல்லது சுயமரியாதையை ஒன்றுமில்லாமல் செய்வதாகும்.

 3) அவரது தலையில்:
 வீரர்கள் முள் கிரீடத்தை வைத்தபோது, ​​அவர் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது (மத்தேயு 27:29-30). ராஜாக்களின் ராஜாவும் கர்த்தாதி கர்த்தரும் கேலி செய்யப்பட்டார்.  முட்கள் ஒரு சாபத்தின் சின்னம், அவரது தலையில் குத்தியது பெரும் வலியை ஏற்படுத்தியது.

 4) அவரது முதுகு:
பொந்தியு பிலாத்து பரபாசைக் கும்பலின் கோரிக்கையின்படி விடுவித்தான்.  கர்த்தராகிய இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார் (மத்தேயு 27:26, ஏசாயா 53:5). மக்கள் குணமடையும்படி அவர் சவுக்கடிப்பட்டார்.  அவரின் முதுகு விவசாயி உழும் நிலம் போல காணப்பட்டது.‌ 

 5) அவரது கைகள்:
 வீரர்கள் அவரது கரங்களில் ஆணிகளால் துளைத்தனர்.  உயிர்த்தெழுந்த ஆண்டவர் மூடிய அறையில் இருந்த சீஷர்களுக்குத் தன் கைகளில் இருந்த அடையாளத்தைக் காட்டினார் (யோவான் 20:25).  மக்களைத் தொட்டு குணப்படுத்திய கை, ஆசீர்வதித்த கை, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பேதுருவைத் தூக்க கைகொடுத்தது, அந்த கைகள் பாவம் நிறைந்த மனிதர்களால் துளைக்கப்பட்டது.

6) அவரது பாதங்கள்:
வீரர்கள் அவரது கால்களை ஆணிகளால் துளைத்தனர்.  மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், போதிக்கவும், கற்பிக்கவும், அற்புதங்களைச் செய்யவும் நடந்த பாதங்கள் கட்டப்பட்டு துளைக்கப்பட்டன.

 7) அவரது விலா:
 போர்ச்சேவகன் விலாவில் குத்தி ரத்தமும் தண்ணீரும் வழிந்தது (யோவான் 19:33-34). பாவமன்னிப்பு அளித்து, புதிய வாழ்வை அளித்து, தம்முடைய நித்திய ராஜ்யத்தின் குடியுரிமையைப் பரிசளிப்பதன் மூலம் பாவிகளை மீட்பதற்காக அவர் தனது கடைசி துளி இரத்தத்தையும் சிந்தினார்.

 என்னை இரட்சிக்க இரத்தம் சிந்திய என் இரட்சகரை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download