மோசே மற்றும் ஆட்டுக்குட்டியினாவரின் பாடல்கள்

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பரலோகத்தின் சில பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பெயர்கள் கொண்ட பாடல் ஒன்று உண்டு (வெளிப்படுத்துதல் 15:1-4). சுவாரஸ்யமாக, இது மோசேயின் பாடல் மற்றும் ஆட்டுக்குட்டியினாவரின் பாடல் என்பதாக அழைக்கப்படுகிறது. மேலும் பழைய மற்றும் புதிய உடன்படிக்கைகளின் ஒருங்கிணைப்பு பாடல். மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பிற்கும் இடையேயான ஒரு முழுமையான ஐக்கியத்தைக் குறிக்கின்றது. 

1) தேவனுடைய கிரியைகள்:
இந்தப் பாடல் தேவனின் மகத்தான, மகத்துவமான மற்றும் ஆச்சரியமுமான கிரியைகளைக் கொண்டாடுகிறது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனளித்த அற்புதமான விடுதலையையும், அடிமைகளை விடுவிப்பதற்காக தேசத்தை நியாயந்தீர்க்க அவர் அனுப்பிய வாதைகளையும், விடுவிக்கப்பட்ட மக்களைப் பின்தொடர்ந்த பார்வோனின் இராணுவத்தை அழித்ததையும் கொண்டாட மோசே பாடலை எழுதினார். நானூறு ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு ஆபிரகாமின் சந்ததியினரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டுவருவதாக அவருக்குக் கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றிய தேவனின் உண்மைத்தன்மையும் அதில் அடங்கியுள்ளது.

2) தேவனுடைய வழிகள்:
தேவனுடைய வழிகள் சத்தியமானவை, பரிசுத்தமானவை, நேர்மையானவை மற்றும் நீதியானவை. தேவன் வழி இல்லாத இடத்தில் வழிகளை உருவாக்குகிறார்; "சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி…" என ஏசாயா 43:16ல் வாசிக்கிறோமே. கர்த்தர் செங்கடலை பிரித்து ஒரு வழியை உருவாக்கினார், இஸ்ரவேலர் கடந்து சென்ற பிறகு, அதே செங்கடலில் அவர் எகிப்திய இராணுவத்தை அதில் மூழ்கடித்தார். எலியாவை பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல தேவன் சுழல் காற்றைப் பயன்படுத்தினார் (2 இராஜாக்கள் 2:1). ஆம், மனிதகுலம் முழுமையும் இரட்சிக்கப்படுவதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளாரே.

3) தேவனுடைய தகுதி:
தேவன் பரிசுத்தமானவர். எனவே, அவர் தேசங்களை நியாயந்தீர்க்கிறார். அனைத்து மனித இனமும் அவர் சமூகத்தில் பயந்து பணிந்து நிற்க வேண்டும். தேவனுடைய தெய்வீக பண்புகள் இயல்பாகவே தெளிவாகத் தெரியும். "எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை" (ரோமர் 1:20). நாம் தேவனோடு சஞ்சரிக்கும் போது (நடக்கும் போது) தனிப்பட்ட அனுபவங்களின் மூலம் அவருடைய பண்புகளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கிறோம். மேய்ப்பன், தஞ்சம், கோட்டை, அடைக்கலம், கற்பாறை, வலிமை, இரட்சிப்பு... என புதிய பெயர்களால் தாவீது தேவனை தொழுது கொள்ள முடிந்ததே. ஆம், தேவன் மாத்திரமே எல்லா துதி கன மகிமைக்கும் தகுதியானவர். 

4) தேவனுக்கே ஆராதனை:
ஆராதனை முழு மனிதகுலத்தையும் தழுவுகிறது. மீட்கப்பட்ட அனைவரும் பிதாவின் அன்புக்காகவும், பண்புகளுக்காகவும், இந்த மாபெரும் இரட்சிப்பிற்காகவும் அவரை தொழுது கொள்கிறார்கள். மற்ற அனைவரும் தயக்கத்துடனோ அல்லது வேண்டாவெறுப்பாகவோ தங்கள் நாவால் கர்த்தராகிய இயேசுவே ஆண்டவர் என அறிக்கை செய்வார்கள் மற்றும் தங்கள் முழங்கால்களையும் அவருக்கு முன் மண்டியிட்டு பணிந்து தொழுது கொள்வார்கள் (பிலிப்பியர் 2:10). 

நான் இங்கே பரலோகப் பாடல்களைப் பாடுகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download