மிகுந்த மகிழ்ச்சியும் பயமும்!

மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் ஞாயிற்றுக்கிழமை காலை தங்கள் எஜமானனும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் அடக்க சடங்குகளை முடிக்க கல்லறைக்கு வந்தனர்.  அங்கு காலியாக இருந்த கல்லறையைக் கண்டு வியந்தனர்.  "அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்" (மத்தேயு 28:8). இதில் சுவாரஸ்யம் என்னவெனில், இருவருக்குமே பயமும் வந்தது மகிழ்ச்சியும் காணப்பட்டது.  ஆம், உயிர்த்தெழுதலின் சத்தியம் விசுவாசிகளுக்கு பிரமிப்பையும் மிகுந்த மகிழ்ச்சியையும் உருவாக்குகிறது.

மிகுந்த சந்தோஷம்:
அவர்கள் உயிர்த்தெழுதலை எதிர்பார்க்கவில்லை.  அவர்கள் துக்கம் அனுசரித்து, அடக்கத்திற்கான சடங்குகளைச் செய்ய விரும்பினர். ஆனால் தூதனின் செய்தியோ இப்படியாக இருந்தது; “அவர் இங்கே இல்லை. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்". ஏசாயா 61:3 ல் உறுதியளித்தது போல துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலமாக, துக்கம் மகிழ்ச்சியாக மாற்றப்பட்டது. கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் அற்புதம் அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்ந்தபோது அவர்கள் பார்த்த மற்ற எல்லா அற்புதங்களையும் விஞ்சியது. அவரை அறிந்துகொள்ளும் பாக்கியத்திற்காகவும், முழு உலகத்திற்கும் மகிழ்ச்சியையும், மனிதகுலம் அனைவருக்கும் நம்பிக்கையையும் அளிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வை அனுபவிக்கும் பாக்கியத்திற்காக அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பயம்:
உயிர்த்தெழுதலில், அவரது தெய்வத்தன்மை சந்தேகத்திற்கு இடமின்றி சான்றளிக்கப்பட்டது.  தேவ குமாரனைப் பார்த்தோம், தொட்டோம், அனுபவித்தோம் என்பதால் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் இறந்துவிடுவார்களா?  மனோவாவும் அவன் மனைவியும் கர்த்தருடைய தூதனைக் கண்டதா் தாங்கள் இறந்துவிடுவோமோ என்று பயந்தார்கள்  அல்லவா (நியாயாதிபதிகள் 13:22). அவர்கள் அவருடைய முன்னிலையில் திகைத்து நின்றனர்.  கர்த்தராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கத்தை அவர்களுக்குக் கற்பித்தார்.  பயத்துடனும் நடுக்கத்துடனும் அவர்கள் அவரின் மாம்சமாகுதலின் நோக்கத்தையும் அதன் தாக்கங்களையும் புரிந்து கொண்டனர்.

பகிருங்கள்:
அவர்களின் மகிழ்ச்சியும் பயமும் வார்த்தைகளில் வெளிப்பட்டது.  சீஷர்களுக்கும் அனைத்து மனிதகுலத்திற்கும் அது நம்பிக்கையின் செய்தி.  அவர்கள் அமைதியாக இருக்கக்கூடாது, ஆனால் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்.  ஆம், நற்செய்தியின் செய்தியைப் பகிர்ந்துகொள்வதன் மகிழ்ச்சியை அவர்கள் அனுபவித்தனர்.

உயிர்த்தெழுதல் ஞாயிறு மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான நாள்.  முதல் ஆதாமின் வீழ்ச்சியால் மரணம் உலகிற்கு கொண்டு வரப்பட்டது.  இரண்டாவது ஆதாம் மனிதகுலத்திற்கு நித்திய ஜீவனைக் கொண்டுவருகிறார், இது அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 நான் மகிழ்ச்சியையும் பயத்தையும் அனுபவிக்கிறேனா?
 Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download