ஆண்டவராகிய இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருத்தல்

எஜமானனுக்கு கீழ் அமர்ந்திருப்பது என்பது ஒரு உன்னத உறவை நிரூபிக்கும் நிலைப்பாடாகும்.  பல கலாச்சாரங்களில், மாணவர்கள் குருக்களின் காலடியில் அமர்ந்து, குருக்களின் பாதங்களைக் கழுவி, வணங்குகிறார்கள்.  பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந்து வணங்கினான் (லூக்கா 5:8). பேய்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மனிதன் கர்த்தருடைய பாதத்தருகே உட்கார்ந்திருந்தான் (லூக்கா 8:35). மார்த்தாள் வேலையாக இருந்தபோது, ​​அவளுடைய சகோதரி மரியாள் அவருடைய பாதத்தில் அமர்ந்து நல்ல நித்திய பங்கைத் தேர்ந்தெடுத்தாள் (லூக்கா 10:38-42).

அவரை நேசியுங்கள்:
தேவனை நேசிப்பவர்கள் அவருடைய இனிமையான குரலையும், தெய்வீக ஞானத்தையும், அபரிமிதமான ஆறுதலையும் கேட்க அவருடைய பாதத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.  தேவனின் அன்பு அற்புதமானது, ஈர்க்கக்கூடியது, வல்லமை வாய்ந்தது மற்றும் நிபந்தனையற்றது, அது மாத்திரமல்ல ஒரு நபரை முற்றிலுமாய் மாற்றுகிறது. பிசாசு பிடித்த மனிதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பினால் மாற்றமடைந்தான், அவரின் அன்பிற்கு அவன் இணங்கினான்.  முன்னதாக அவன் தவறாக நடத்தப்பட்டான், கேலி செய்யப்பட்டான், அவனை கல்லெறிந்தார்கள், அதற்கெல்லாம் அவன் கொடூரமாக எதிர் வினையாற்றினான்.  கர்த்தராகிய ஆண்டவர் அவனை நேசித்ததும் மிக அமைதலோடு அவரின் பாதம் அமர்ந்தான்.

 அவர் சொல்வதைக் கேளுங்கள்:
 சுற்றிலும் பலவித சத்தங்கள் இருந்தாலும், மரியாள் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கவனிப்பதைத் தேர்ந்தெடுத்தாள்.  அவள் வாழ்நாளில் கிடைத்த, அது ஒரு பொன்னான வாய்ப்பு என அதற்கு முன்னுரிமை கொடுத்தாள். கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டியவனைப் போன்ற ஞானமுள்ள மனிதனாக மாறுவதற்குக் கேட்பதும் கீழ்ப்படிவதும் முக்கியம் (மத்தேயு 7:24).

 அவரிடம் அர்ப்பணியுங்கள்:
 இது சரணடைதல் மற்றும் சமர்ப்பணம் ஆகியவற்றையும் குறிக்கிறது.  கர்த்தராகிய ஆண்டவர் கர்த்தாதி கர்த்தர் ராஜாதி ராஜா.  விசுவாசமுள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் அவரிடம் தங்களை அர்ப்பணித்து அவருடைய சித்தத்திற்கு சமர்ப்பிக்கிறார்கள்.  பேய் பிடித்த மனிதனை சங்கிலிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆனால் அவன் மனப்பூர்வமாகவும், மனமுவந்தும் தேவனிடம் சரணடைந்தான்.

 அவரிடம் நம்பிக்கையாய் இருங்கள்:
 ஒருவர் அவருடைய காலடியில் அமர்ந்தால், அவர், உயிர்த்தெழுந்த ஆண்டவர் மற்றும் தேவன் மீது முழு விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்.  அவர்கள் விசுவாசத்துடன் அவருடைய பாதத்தில் இளைப்பாறுகிறார்கள்.  ஆம், அவர்களின் இருதயம் ரீங்காரமிடும் வண்டுகளோ அல்லது இலக்கின்றி ஓடும் தலையில்லாத கோழிகளோ ​​அல்ல.  பவுல் குறிப்பிடுவது போல், அவர்கள் விசுவாசிப்பவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியும் (2 தீமோத்தேயு 1:12).

அவரிடம் சிரத்தையுள்ள சீஷனாய் இருங்கள்:
தாவீது ராஜா, "கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்" (சங்கீதம் 27:4) என்றான். சிரத்தையுள்ள சீஷர்கள் தவறாமல், தொடர்ந்து, மகிழ்ச்சியுடன் அவருடைய பாதத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

 நான் பால்குடி குழந்தையைப் போல அவர் பாதத்தில் அமர்ந்திருக்கிறேனா?  (சங்கீதம் 131:2)

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download