மௌனமும் புன்னகையும்

மெளனமும் புன்னகையும் என்ற இரண்டு எளிய கொள்கைகளை மக்கள் பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஒரு உளவியலாளர் விளக்கினார்.  உண்மையில், ஞானமுள்ளவர்கள், பக்குவமுள்ளவர்கள், நீதியுள்ளவர்கள் மற்றும் தாழ்மையுள்ளவர்கள் தூண்டப்பட்டாலும், மெளனத்துடனும் சிறு புன்னகையுடனும் கடந்து செல்கிறார்கள்.‌ 

ஞானம்:
"பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்" (நீதிமொழிகள் 17:28). மனிதர்களுக்குக் தேவன் கொடுத்த மிகப் பெரிய கொடையே சிந்திப்பதும், அந்த எண்ணங்களை வார்த்தைகளாக வெளிப்படுத்தும் திறமையாகும். ஆயினும்கூட, வார்த்தைகள் ஆசீர்வாதங்களை உருவாக்கலாம், சபிக்கவும் முடியும் அல்லது ஊக்குவிக்கவும் முடியும், ஊக்கமிழக்க செய்யவும் முடியும் மற்றும் நிலைநிறுத்தவும் முடியும் நிராகரிக்கவும் முடியும். ஆக, புண்படுத்தும், சபிக்கும், இழிவான மற்றும் வெறுக்கத்தக்க வார்த்தைகளை விட மௌனமே சிறந்தது. ஒரு சீஷனால் நல்ல வார்த்தைகள் பேச முடியாதபோது, ​​அமைதியாக இருப்பது நல்லது.

ஆண்டவர் இயேசுவின் முன்மாதிரி:
முதலாவதாக, கர்த்தராகிய இயேசு மக்களை நேசித்தார், குறிப்பாக அந்த பணக்கார இளைஞன், அவர் ஒருவேளை தம் புன்னகையில் வெளிப்படுத்தினார் (மாற்கு 10:21). இரண்டாவதாக, பேதுரு, அநேகமாக, கர்த்தராகிய இயேசுவைக் கைது செய்தபின் சாட்சியாக எழுதுகிறார்; கர்த்தர் அவமதிக்கப்பட்டபோது, ​​அவர் பதிலடி கொடுக்கவில்லை, பயமுறுத்தாமல் துன்பப்பட்டார் (1 பேதுரு 2:23). மூன்றாவதாக,  "அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்" (ஏசாயா 53:7).  நான்காவதாக, அவருடைய வாயில் வஞ்சகம் காணப்படவில்லை (ஏசாயா 53:9).

பரிசுத்த சமூகத்தில் அமைதி:
ஆரோனின் குமாரராகிய நாதாப் மற்றும் அபியூவும் தூபகலசத்தில் அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டு வந்தார்கள்.  அது தேவனின் கட்டளையை அலட்சியம் பண்ணுவதாகும் அல்லது முற்றிலும் முட்டாள்தனமானதாகவும் இருந்தது.  தேவ கோபம் அவர்கள் மீது வந்தது, அவர்கள் இறந்துவிட்டார்கள்.  ஆரோன் அதிர்ச்சியடைந்து திகைத்தான்.  கர்த்தருக்கு அருகில் வருபவர்கள் தேவன் பரிசுத்தமானவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று மோசே விளக்கினார், மேலும் அவர் எல்லா மக்களுக்கும் முன்பாக மகிமைப்படுத்தப்படுவார்.  இரண்டு மகன்களும் தேவனின் எதிர்பார்ப்பை மீறினர்.  ஆரோன் அமைதியாக இருந்தான்.  தேவனின் பரிசுத்த பிரசன்னத்திற்காக அவரது மகன்களுக்காக துக்கப்படுவதற்கான அவரது உரிமையும் தியாகம் செய்யப்பட வேண்டும் (லேவியராகமம் 10:1-3). "கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது" (ஆபகூக் 2:20).  

ஆசிர்வதிக்கப்பட்ட பெண்:
புன்னகை என்பது முகத்தின் நட்புடனான வெளிப்பாடு.  ஆசீர்வதிக்கப்பட்ட புத்திசாலி பெண் வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள் (நீதிமொழிகள் 31:25). ஞானமுள்ள பெண் எதிர்காலத்தைப் பற்றி பயப்படவில்லை, ஏனென்றால் அவள் எதிர்காலத்தைப் பற்றி உறுதியாக இருந்தாள்.  ஏனென்றால் அவள் சிரத்தையுடன், புத்திசாலித்தனமாக எதிர்காலத்திற்காக ஆயத்தமாக இருந்தாள்.

 நான் சமய சந்தர்ப்பங்களில் புன்னகையுடனும் மற்றும் மௌனமாகவும் இருப்பேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download