தியாகம் மற்றும் சேவை

ஒரு திருமணக் கருத்தரங்கின் தலைவர் திருமணமான ஒவ்வொரு நபரையும் சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து ஐந்து புகார்களையோ அல்லது ஐந்து பாராட்டுகளையோ தங்கள் துணையைப் பற்றி எழுதச் சொன்னார்.  அவர்கள் எழுதி தருவது ரகசியமாக காக்கப்பட்டது.  எழுதிய காகிதங்களைப் பார்த்த போது புகார்களின் பட்டியல் நீண்டு கொண்டிருந்தன, மேலும் சிலவற்றில் பாராட்டுதல்களும் இருந்தன. அதில் சுவாரஸ்யமான ஒன்று; புகார்கள் இல்லை;  உங்கள் சேவைக்கும் தியாகத்திற்கும் நன்றி என்று மாத்திரம் இருந்தது.

உறவுகள்:
திருமணம் என்பது உலகின் மிக நெருக்கமான, நீடித்த மற்றும் இனிமையான உறவு.  ஆனால் பெரும்பாலான திருமணங்களில் வாழ்க்கைத் துணைவர்கள் ஒரு நல்ல, ஆரோக்கியமான மற்றும் அமைதியான உறவைப் பேணுவது கடினமாக காணப்படுகிறது. வாழ்க்கைத்துணை  உறவை தவறாக வழிநடத்தலாம், மற்றொருவர் தவறாக இருக்கலாம்.  சுயம் மேலோங்கி மோதல்கள் காணப்படும் மற்றும் அதிகாரப்போக்கும் குடும்பத்தில் அமைதியை அழிக்கிறது.

எதிர்பார்ப்புகள்:
ராகேல் யாக்கோபிடம் தனக்கு ஒரு மகனைக் கொடுக்குமாறு கோரினாள்.  அந்த ஆசீர்வாதத்தை தேவன் தடுத்துவிட்டார் என்று யாக்கோபு கூறினான் (யாத்திராகமம் 30:1-2). சில சமயங்களில், வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் அல்லது ஆசைகள் மற்றும் தேவைகளை (உடல், சமூக, உணர்ச்சி, மன, ஆவிக்குரிய) தங்கள் துணைவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள், அதை தேவனால் மட்டுமே சந்திக்க முடியும்.  தவறான நபரிடம் இருந்து சரியான எதிர்பார்ப்புகள் கூட ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.  தேவனை ஆதாரமாகப் பார்ப்பதற்குப் பதிலாக, வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் துணைகளையேப் பார்க்கிறார்கள்.  அது நடக்காதபோது விரக்தி, கோபம், கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் கூட தொடங்கும்.

அர்ப்பணிக்கும் அணுகுமுறை:
திருமணம் என்பது மற்றவரிடமிருந்து சேவையைப் பெறுவதாகக் கருதப்படுகிறது, பெரும்பாலான கலாச்சாரங்களில் கணவன் மனைவியிடமிருந்து சேவையைப் பெறுகிறான்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள பயபக்தியின் காரணமாக ஒருவருக்கு ஒருவர் கீழ்ப்படிய வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார் (எபேசியர் 5:21).

தியாக மனப்பான்மை:
குடும்பத்தின் அடிப்படை தியாகம்.  தன்னலமற்ற தியாகம் மற்றும் பிறரை மதிப்பது குடும்ப வளர்ச்சிக்கு முக்கியமாகும்.  இது மற்றவர்களின் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து அவர்கள் வெளிப்படுத்தும் முன் அதை வழங்குவதாகும்.  அவர்களின் திறமைகளையும் வரங்களையும் வெளிப்படுத்தும் அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்புகளை வழங்குவது தியாகமாகும்.  பல கலாச்சாரங்களில், பெண்கள் தியாகம் செய்ய வேண்டும், அதே நேரத்தில் ஆண்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி மனப்பான்மை:
மனைவி வீட்டில் உணவு சமைக்கும் போது, ​​அது அன்பின் சேவையா அல்லது வேலையா அல்லது கடமையா அல்லது தர்மமா?  அதை அங்கீகரித்து, பாராட்டி, விருது வழங்க வேண்டுமா?  பல கலாச்சாரங்களில், மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.  கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம் நன்றியை வெளிப்படுத்துவதாகும்.

நான் நன்றியுடன் சேவை செய்கிறேனா மற்றும் தியாகம் செய்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download