தீர்மானங்களும் எதிர்பார்க்கப்படுபவைகளும்

மக்கள் பொதுவாக புத்தாண்டில் தீர்மானங்களை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அமைதியாக மறந்துவிடுவார்கள்.  அந்தத் தீர்மானங்களும் அவருடைய எதிர்பார்ப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும். தானியேல் தனது இருதயத்தில் தீர்மானித்து, கருத்தாக செயல்படுத்தினான் (தானியேல் 1:8). மல்கியா தீர்க்கதரிசி, தேவனின் கடுமையான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பட்டியலைத் தருகிறார் (மல்கியா 3:5).

சூனியம்:
ஜாதகங்களைப் படித்து உலகக் கோப்பைக்கான தேசிய அணியைத் தேர்ந்தெடுக்க ஒரு நாடு ஜோதிடரை ஈடுபடுத்துகிறது.  உடல் தகுதி, திறன்கள், தாலந்துகள், மன உறுதி மற்றும் ஊக்குவிப்பு உணர்வு ஆகியவை முக்கியமற்றதாகிறது.  மந்திரவாதிகள், சொப்பனக்காரர்கள், குறி சொல்லுபவர்கள் மற்றும் ஏமாற்றும் மந்திரவாதிகள் மக்களின் மனதையும் இருதயத்தையும் ஆளுகின்றனர்.  கடவுளுக்கு அஞ்சாதவர்கள், மற்ற எல்லாவற்றிற்கும் அஞ்சுவார்கள். எனவே, அவர்கள் தேவனுக்கு எதிரான தங்கள் சொந்த ஆன்மீகத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.  நான் கர்த்தரையும், அவருடைய வார்த்தையையும், அவருடைய மக்களையும் ஆலோசனைக்காகவும் பரிந்துரைக்ககாகவும் தேடுகிறேனா?

விபச்சாரம்:
திருமணம் என்ற அமைப்பு கேலி செய்யப்படுகிறது, ஏளனம் செய்யப்படுகிறது மற்றும் திருமணத்தின் புனித உடன்படிக்கை இல்பொருளாகிறது அல்லது ரத்து செய்யப்படுகிறது.  திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, திருமணத்திற்கு புறம்பான உடலுறவு மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு வழக்கமாகி வருகிறது.  திருமணம் மற்றும் விவாகரத்தில் கொடுமையான விஷயங்களை தேவன் வெறுக்கிறார்.  நான் என் வாழ்க்கை துணையையும், திருமணம் என்ற அமைப்பையும் மதிக்கிறேனா, ஆபாசப் படங்கள் உட்பட எல்லாத் தீமைகளையும் விட்டு விலக்குகிறேனா?

பொய்:
மக்கள் தேவ பெயரை பயன்படுத்தி, நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும், மக்களை நம்ப வைப்பதற்கும் சத்தியம் செய்கிறார்கள்.  கோடிக்கணக்கான மக்கள் நிதி ஆலோசகர்கள், வங்கியாளர்கள் மற்றும் பங்கு சந்தை முதலீடுகளால் ஏமாற்றப்படுகிறார்கள்.  எல்லா இடங்களிலும் நம்பிக்கை குறைபாடு உள்ளது.  சரியான இடங்களில் அல்லது நேரத்தில், எதற்கு சரி என்று சொல்ல வேண்டுமோ அதற்கு சரி என்றும், எதற்கு இல்லை என்று சொல்ல வேண்டுமோ அதற்கு இல்லை என்றும் சொல்கிறேனா? 

பொருளாதார ஒடுக்குமுறை:
ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படுவதில்லை.  தாமதமான ஊதியம் அளிப்பது பொதுவானது.  பலர் தங்கள் சேவைகளுக்காக குறைந்த ஊதியம் பெறுகிறார்கள்.  இடைத்தரகர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்குப் பதிலாக, சில செயலி பயன்பாடுகள் டாக்ஸி டிரைவர்கள், டெலிவரி ஏஜென்ட்கள், இன்சூரன்ஸ் ஏஜென்ட்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் போன்ற தொழிலாளர்களின் திறமைகளை கொள்ளையடிக்கிறது.  எனது பராமரிப்பில் உள்ளவர்களையோ அல்லது சேவை செய்பவர்களையோ (ஓட்டுனர்கள், வேலையாட்கள், சமையல்காரர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள்... போன்றவர்கள்) 
நான் ஒடுக்கி சுரண்டுகிறேனா? 

சமுதாய ஒடுக்குமுறை:
விதவைகள் மற்றும் தந்தையற்றவர்கள் மதிக்கப்படுவதில்லை, பராமரிக்கப்படுவதில்லை அல்லது உதவுவாரில்லை.  மாறாக, அவர்கள் பல வழிகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.  அத்தகையவர்களின் வாழ்க்கையை நான் எளிதாக்குகிறேனா அல்லது நடந்து கொள்ளும் விதத்தில் மற்றும் வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்துகிறேனா? (யாக்கோபு 1:27).

சமூக ஒடுக்குமுறை:
புலம்பெயர்ந்தவர்களும் சுரண்டப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள்.  புலம்பெயர்ந்தவர்களுக்கு நான் உதவி செய்ய முன்வருகிறேனா?

எனது புத்தாண்டு தீர்மானங்கள் தேவ சித்தம் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் எவ்வாறு இணைந்துள்ளது?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download