கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்

போராட்டங்கள், பிரச்சனைகள், தோல்விகள் மற்றும் ஆச்சரியங்கள் என நிறைந்த உலகில் மகிழ்ச்சியான நிலையில் தொடர்ந்து இருப்பது என்பது கடினமே.  இருப்பினும், பவுல் ரோமில் சிறைச்சாலையில் இருக்கும்போது பிலிப்பியர்களுக்கு "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:4) என்று எழுதுகிறார். பிலிப்பியர் 4ம் அதிகாரம் முழுவதுமே கர்த்தரில் எப்போதும் சந்தோஷமாக இருப்பதற்கான திறவுகோலை வழங்குகிறது. இப்படி மகிழ்ச்சியாய் இருப்பது என்பது சூழ்நிலைகள் அல்லது நிகழ்வுகள் சார்ந்தது அல்ல, மாறாக அது தேவனோடு கொண்ட உறவின் அடிப்படையில் ஆனது. ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் தேவ மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஏழு அம்சங்கள் உள்ளன.

1) ஐக்கியம்:

சமரசம் செய்து ஐக்கியமாக  இருக்குமாறு எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் பவுல் புத்தி சொல்கிறார்.  ஆம், ஐக்கியமும் அமைதியும் மகிழ்ச்சியைத் தருகின்றன.  இந்த ஐக்கியம் செயற்கையானது அல்ல, ஆனால் மறைமுகமானது மற்றும் அனுபவம் வாய்ந்தது.  எல்லா விசுவாசிகளும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், ஐக்கியம் என்பது எப்போதும் உள்ளது.

2)  நல்யுணர்வு:

ஆண்டவரின் சீஷர்கள், நித்திய கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு மாதிரியைக் கொண்டுள்ளனர்.  அவர்களுடைய மனப்பான்மையும் வாழ்க்கை முறையும் ஆர்வமுடன் அவரின் வருகையைப் பற்றிய நம்பிக்கையால் கட்டளையிடப்படுகிறது.  அந்த நம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

3) பதட்டம் இல்லை:

பயமும் கவலையும் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.  விசுவாசிகள் தங்கள் கவலைகள், வேதனைகள், அச்சங்கள், பற்றாக்குறைகள் மற்றும் மன அழுத்தங்களை ஜெபங்களாக மாற்றுமாறு பவுல் அறிவுறுத்துகிறார்.  தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் என்ற நம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

4) அமைதி:

விசுவாசிகள் விசுவாசத்துடன் ஜெபிக்கும்போது, வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொள்கிறார்கள். எல்லா புரிதலையும் மிஞ்சும் அமைதி இதயங்களையும் மனதையும் நிரப்புகிறது.  நிச்சயமாக, மன அமைதி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

5) எண்ணங்கள்:

எதிர்மறையான, அற்பமான, சாதாரணமான, அசுத்தமான, வெறுக்கத்தக்க, கசப்பான, முட்டாள்தனமான எண்ணங்களால் ஒரு மனம் ஆக்கிரமிக்கப்பட்டால், அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.  கிறிஸ்தவ சிந்தனைகள் சத்தியமும், கனமும், நீதியானவைகளும், அழகானவைகளும், தூய்மையானவைகளும், போற்றத்தக்கவைகளுமாக காணப்படுகின்றன. இந்த எண்ணங்கள் எந்தவொரு நபரையும் மகிழ்ச்சியின் உயர்ந்த தரத்திற்கு உயர்த்தும்.

6) மனநிறைவு:

பவுல் தனது சுய ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய பயம் எல்லா சூழ்நிலைகளிலும் திருப்தியாக இருப்பதற்கான காரணமாக எழுதுகிறார். தாராளமாக அல்லது பசியுடன், மிகுதியாக அல்லது தேவையில், தாழ்வு நிலையில் அல்லது உயர்ந்த நிலையில் எதுவாக இருந்தாலும், "போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6), ஆம் அது மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது.

7) முன்னேற்பாடு:

தேவன் தனக்கான தேவைகள் யாவையும் சந்திப்பார் என பவுல் உறுதியாக இருந்தார்.  "தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19), ஆம் அது மனித தராதரங்களுக்கு அப்பாற்பட்டது.

நான் எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ந்து களிகூருகிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download