தேவனைக் கேள்வி கேட்பதா?

“எனது மகன் இருக்கும் போது தேவன் எப்படி இன்னொருவனுக்கு அபிஷேகம் செய்வார்?”. இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டபோது இந்தக் கேள்வியைக் கேட்க மறந்துவிட்டான். உண்மையில், அவன் தனது தந்தையின் வழிதவறிய கழுதைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்கான தேடுதல் பணியில் இருந்தான் (1 சாமுவேல் 9). சவுல் தனது எளிமையான நிலை மற்றும் அந்தஸ்தைப் பற்றி அறிந்திருந்தான். ஆனாலும், தாவீதுக்கு அதே உரிமையை கொடுக்க அவனால் முடியவில்லை. போதகர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள், அரசியல்வாதிகள் தவிர, தங்கள் வாரிசுகள் தங்கள் அதிகாரம், செல்வாக்கு மற்றும் சிறப்புரிமை ஆகியவற்றைக் கைப்பற்றுவதை உறுதிசெய்ய விரும்புகிறார்கள். அத்தகைய தலைமைப் பதவிகளுக்கு விருப்பப்படும் மற்றவர்களின் உரிமைகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள்.

1) இறையாண்மை தேவனின் அதிகாரத்தை மறுத்தல்:
தம் மக்களுக்குத் தலைவர்களை நியமிப்பது தேவனின் தனிச் சிறப்பு. மேலும் தேவன் நம்மை ஆலோசகர்களாக நியமிக்கவில்லை. களிமண் குயவனிடம் திரும்பிப் பேச முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம் (1 சாமுவேல் 9:10).

2) குழந்தைகள் மீதான திணிப்பு:
வேதாகமத்தில், பிள்ளைகளின் மீது எதையும் திணிக்கும் தகப்பன்களைப் பற்றி நாம் படிக்கிறோம், அவர்களை சரியாகக் கண்டித்து கீழ்ப்படிதலோடு வளர்ப்பதில்லை. தாவீது அப்சலோமை நேசித்தான், அவன் எதிராக கலகம் செய்த பிறகும் அரியணையை கைப்பற்றினான். தேசத்தில் யுத்தம் நடந்தது, அதில் அப்சலோம் இறந்துவிடவும், அவனுக்குப் பதில் தான் மரித்திருந்தால் நலமாயிருக்கும், ராஜாவாக வேண்டிய தன் வாரிசு இறந்துவிட்டானே என தாவீது புலம்பினான் (2 சாமுவேல் 18:33). அதுபோல், தேவனுக்குக் கொண்டுவரப்பட்ட பலிகளை இழிவுபடுத்தும் செயல் தேவனையே அவமதிப்பது போலாகும், ஆனால் தனது மகன்களை ஆசாரியனான ஏலியால் கண்டிக்க முடியவில்லை (1 சாமுவேல் 3:13). 

3) மேலானவன் என தவறான உணர்வு:
தேவன் அவர்களைத் தேர்ந்தெடுத்து முன்னுரிமைகளை வழங்கியிருப்பதால், அவர்கள் உயர்ந்தவர்கள் என்றோ சலுகை பெற்ற குலம் என்றோ அல்லது வர்க்கம் அல்லது சாதி என்றோ அர்த்தமல்ல. அவர்கள் மற்றவர்களை விட பெரியவர்களாக மாறுவதில்லை, ஆனால் தேவ கிருபை, அழைப்பு, வரம் மற்றும் வாய்ப்பு அவர்களுக்கானதை நிறைவேற்ற உதவியது.

4) அண்டை வீட்டாரிடம் அன்பு:
மற்றவர்களை நேசிப்பது என்பது நாம் விரும்பும், மகிழும், ஆசைப்படும் மற்றும் தக்கவைத்துக்கொள்ளும் சம உரிமைகளை வழங்குவதாகும். வித்தியாசமாக, அவர்களின் அன்பு என்னவோ குடும்ப வட்டத்திற்குள் மாத்திரமே உள்ளது.

5) சிறப்புரிமை மற்றும் மரபு:
சவுல் ஆட்சியாளர்களாக தன் வம்சத்தை உருவாக்க விரும்பினான். இது அவனுக்கான முன்னுரிமை, மேலும் யோனத்தான் தனது பாரம்பரியத்தை நிலைநிறுத்த வெற்றி பெறுவான் அவன் நினைத்தான். தேவன் சவுலை நிராகரித்தார், ஆனால் தாவீதைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு வம்சத்தை வழங்கினார்; அவனுடைய சந்ததியிலிருந்து மேசியா வருவார்.

நான் தேவ சித்தத்தைத் தேடுகிறேனா அல்லது தேவனுக்கு அறிவுரை கூற முயலுகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download