பிரச்சனை தீர்ப்போர்

சமுதாயத்தில் துன்பம், அநீதி அல்லது அக்கிரமம் பற்றி எல்லா மனிதர்களுக்கும் கேள்விகள் உள்ளன.  சிலர் கவலைப்படுகிறார்கள் அல்லது அக்கறை கொள்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.  கிதியோனுக்கும் இப்படி கேள்விகள் இருந்தன; அதனால் அவன் ஆண்டவரை நோக்கி; "ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்" (நியாயாதிபதிகள் 6:13‭-‬14). 

ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?
தேவனை நம்பும் எவருக்கும் இந்த கேள்வி இயல்பான ஒன்று. எகிப்திய அடிமைத்தனத்திலிருந்தும் கொடுங்கோன்மையிலிருந்தும் தேவன் இஸ்ரவேல் தேசத்தைக் காப்பாற்றினார் என்பதை கிதியோன் அறிந்திருந்தான்.  இப்போது, ​​அவருடைய மக்கள் ஏன் மீண்டும் அடிமைகளாக மாற வேண்டும்?  தேவன் அவர்களைக் கைவிட்டாரா?

 நமக்கு என்ன ஆனது?
பிரச்சனை தேவனிடம் இல்லை, இஸ்ரவேல் தேசத்தாரிடம் தான் உள்ளது என்பதை கிதியோன் புரிந்து கொண்டான். எப்படியோ, எங்கோ தவறு செய்துவிட்டார்கள். இருப்பினும் தேவன் ஏன் அவர்களைக் கைவிட்டார் என்பதை அவன் புரிந்துகொள்ள முயன்றான்.

 பலத்த அற்புதங்களா?
 எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை மீட்பதற்காக தேவன் பத்து வாதைகள் மற்றும் செங்கடலைப் பிரித்தல் உட்பட பலமான செயல்களைச் செய்தாரே.  தேவன் ஏன் இப்போது அப்படிச் செய்வதில்லை?

 ஆண்டவரின் பதில்:
 தேவன் கிதியோனைப் போகும்படி கட்டளையிட்டார்.  அவன் தன்னிடம் உள்ள பலத்துடன் செல்ல வேண்டும்.  கிதியோன் இஸ்ரவேலை எதிர்கொள்ளும் வலிமை தனக்கு இல்லை என்று நினைத்தான்.  இருப்பினும், கிதியோன் தேவனால் அனுப்பப்படுவதால் விசுவாசத்துடன் செல்ல வேண்டும்.  கிதியோன் பெறும் பலம் இஸ்ரவேலரை மீட்பதற்காகத்தான்.

 பிரச்சனை தீர்ப்போர்:
 தேவனின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தான் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டதை கிதியோன் உணர வேண்டும்.  என்ன நடக்கிறது அல்லது சில விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்று அவன் ஆச்சரியப்படக்கூடாது, அதற்குப் பதிலாக எவ்வாறு தீர்வு காண்பது என்பதை கண்டறிய வேண்டும். ஆம், கிதியோன் மாத்திரமல்ல, அனைத்து சீஷர்களுமே சமுதாயத்தில் அல்லது உலகில் தன்னைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க கடமைப்பட்டுள்ளனர்.  கிதியோனைப் போலவே, அவர்கள் இருக்கும் பலத்துடன், தேவ வல்லமையும் அற்புதங்களும் செய்வார் என்ற எதிர்பார்ப்போடு விசுவாசத்தில் செல்ல வேண்டும்.

 நான் தேவனின் கருவி என்ற உணர்வோடு, உலகின் பிரச்சனைகளை தீர்க்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download