நீதியைப் புரட்டுதல்

ஒரு நாட்டின் நல்ல பிரபலமான அரசியல்வாதி ஒருவர் ஊழல்வாதி என்று கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிரூபிக்கப்பட்டது.  நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை, கடவுள் அப்பெண்மணியைத் தண்டிப்பார் என்று கூறி நீதிபதி அறவே தண்டனையின்றி விடுவிக்க அனுமதித்தார்.  குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் இருந்தும், நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்தார். இதுதான் மோசே எச்சரித்த நீதியை புரட்டி போட்டதற்கு ஒரு உதாரணம் (உபாகமம் 16:19-20).

 பாரபட்சம்:
 சிலருக்கு ஆதரவாகவும் சிலருக்கு பாகுபாடு காட்டுவதும் பாரபட்சமாகும்.  செல்வாக்கும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் அவர்களைப் போன்றவர்களை ஆதரிப்பதாகத் தெரிகிறது.  நான் உனக்கு உதவுகிறேன், தேவையான நேரத்தில் நீ எனக்கு உதவு என்ற உலகக் கொள்கை செயல்படுகிறது.  பணக்காரர்கள், அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்கள், ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள் நியாயமற்ற நீதிபதிகளின் தயவைப் பெறுவார்கள்.  பாரபட்சம் ஆபத்தானது மற்றும் குடும்பங்களில் கூட குழப்பத்தை உருவாக்குகிறது. யாக்கோபை நேசித்து பாரபட்சம் காட்டினாள் ரெபெக்காள், யாக்கோபு இரு குடும்பங்களிலும் துன்பத்தை உருவாக்கினான்.

பரிதானம்:
“பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம் போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்” (நீதிமொழிகள் 17:8). நீதி கோணலாக்கப்பட்டு, லஞ்சத்திற்கு விற்கப்படுகிறது.  லஞ்சப் பணத்தின் பலத்தால் உண்மை நசுக்கப்படுகிறது, சாட்சிகள் வாயடைக்கப்படுகின்றன, சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றன.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏமாற்றி சிக்க வைப்பதற்காக யூதாஸுக்கு முப்பது வெள்ளி நாணயங்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டதே (மத்தேயு 26:15).

 குருட்டு:
 நீதிபதியைக் குருடாக்க லஞ்சமும் பயன்படுத்தப்படுகிறது.  அவர் சாட்சியின் உறுதியான ஆதாரம் அல்லது உண்மை பார்க்க மறுப்பார், எனவே குற்றவாளிக்கு சாதகமாக இருக்கும்.

 முட்டாள்தனம்:
 ஒரு புத்திசாலி நீதிபதி துரதிர்ஷ்டவசமாக ஒரு முட்டாள் நீதிபதியாகிறார், மேலும் அப்பாவி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.  ஒரு நீதிபதியின் அறிவு, பகுப்பாய்வு திறன், விவேகமான மனம் மற்றும் நீதித்துறை நுண்ணறிவு ஆகியவை லஞ்சம் காரணமாக முட்டாள்தனமாகவும், அற்பத்தனமாகவும், மூடத்தனமாகவும்,  மாறுகின்றன.  இத்தகைய நீதிபதிகளின் தீர்ப்புகள் கேலிக்குரியதாகவும், நகைச்சுவையாகவும் உள்ளன.

 கவிழ்த்தல்/புரட்டுதல்:
 ஒரு நிறுவனத்தின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிடுவது அல்லது தரம் தாழ்த்தி உட்படுத்துவது என்று பொருள்.  லஞ்சம் வாங்கும் நீதிபதிகள், நீதித்துறையை சீர்குலைக்கிறார்கள்.  நியாயம் தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரள செய்வதற்குப் பதிலாக, எட்டியைப் போன்ற விஷம் அல்லது கசப்பான பானமாக மாற்றுகிறார்கள் (ஆமோஸ் 5:7,24). ஆட்சியில் தேவ நீதியைக் காட்ட வேண்டிய அமைப்பு, செயல்படாததாக அல்லது சாத்தானின் கைகளில் ஒரு கருவியாக மாறுகிறது.

 ஒரு அருட்பணியாக நீதியை நிலைநாட்டுவதில் நான் பங்கேற்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download