கலக்கமும் இல்லை, குழப்பமும் இல்லை

சீலோவாம் குளம் அருகே முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். அப்படி கலக்கும் போது குளத்தில் இறங்கிய முதல் நபராக அவன் இருக்க விரும்பினான்.  கர்த்தராகிய இயேசு அங்கு வந்து, அவனுடன் பேசிய பிறகு, அவனுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கும்படி கட்டளையிட்டார்.  அவன் உடனடியாக குணமடைந்தான் (யோவான் 5:1-16). இது ஒரு பொது சுகமாக்கலாக இருந்தது, ஆயினும் அங்கிருந்த திரளான மக்கள் குணமடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் திரளவில்லை.

கவனிக்கவில்லை:
ஒரு வேளை, மாற்றுத்திறனாளிகளும் முடங்கியவர்களும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவில்லை.  அவர்கள் அனைவரும் குணமடைந்த முடவனின் அதே நிலையில் இருந்தனர்.  ஆனாலும், அவன் குணமடைந்ததை அவர்கள் அறியவில்லை.  மேலும், நோய்வாய்ப்பட்டவர்களுடன் இருந்த உதவியாளர்கள் இந்த அதிசயத்தை கவனிக்கத் தவறிவிட்டனர்.  அதாவது, அவர்கள் குணப்படுத்துவதில் தங்கள் முதன்மையான கவனத்தைத் தவறவிட்டு வேறு எதையாவது எதிர்பார்த்திருக்கலாம்.

கவனம் - தேவதூதன்:
ஒரு தேவதூதன் ஆச்சரியப்படுத்தும் விதமாக அந்தக் குளத்திற்குச் சென்று அதைக் கலக்குவார் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்ததால், அவர்கள் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், குளக்கரையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

கவனம் - நீர்:
சிலர் தண்ணீர் கலக்கும் வரை காத்திருந்தனர்.  தேவதூதனை தேடுவதற்குப் பதிலாக, அவன் எந்தத் திசையிலிருந்து தோன்றக்கூடும் என்று தெரியாமல், அவர்கள் குளத்தின் நீரைப் பார்க்கத் தேர்ந்தெடுத்தனர்.  தொடர்ந்து அலைகளின் அசைவுகள் அவர்களின் கவனத்தை ஈர்த்தது.  அதனால், குளத்தின் கரையில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

கவனம் - குளத்தில் இறங்குதல்:
ஒரு தேவதூதன் தண்ணீரை கலக்கியவுடன் யார் முதலில் அதில் இறங்குவது என கவனம் செலுத்தப்பட்டது.  ஓடத் தயாராக இருக்கும் ஒரு ஓட்டப்பந்தய வீரனைப் போல, அவர்கள் குதிப்பதற்கான குறுகிய மற்றும் வேகமான வழியை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தனர்

தவறிவிடல்:
வானத்திற்கும் பூமிக்கும் தேவன், தேவதூதர்கள், நீர் மற்றும் குளம் ஆகியவற்றை உருவாக்கியவர், எல்லா நோய்களையும் குணப்படுத்துபவர் அருகில் இருந்தும் அவர்கள் அவரை தவறவிட்டனர்.  இன்றும் கூட, கனவுகள் அல்லது தரிசனங்கள் அல்லது எழுப்புதல் அல்லது குறிப்பிட்ட மனநிலை அல்லது ஒரு பிரபல பிரசங்கிக்காக காத்திருந்து கர்த்தராகிய ஆண்டவரை மக்கள் இழக்கிறார்கள்.  யூதர்கள் விசுவாசத்தில் வார்த்தையைப் பெறாமல் வேறு எங்கோ தேடிக்கொண்டிருந்ததால், இன்று பலர் ஒவ்வொரு நாளும் அவரைக் காணவில்லை (ரோமர் 10:6)

தேவன் கொடுத்த வாய்ப்புகளை நான் இழக்கிறேனா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download