என் எஜமானன் தாமதமாகிவிட்டார்

தேசிய மாணவர் படை (என்சிசி)  ஒரு கல்லூரியில் உடல் பயிற்சியின் போது சில ஜூனியர் மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய வீடியோ வைரலானதை அடுத்து சீனியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  எட்டு மாணவர்கள் மழையின் நடுவே ஒரு குட்டையில் கைகளை ஆதரவாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சேற்று மண்ணில் தலையைப் பிணைத்தபடி இருப்பதை வீடியோ காட்டுகிறது.  மாணவர்கள் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் கால்கள் மற்றும் தலைகள் தரையைத் தொட்டு கைகளை முதுகிற்கு மேல் மடக்கிய நிலையில் புஷ்-அப் நிலையில் காணப்படுகின்றனர்.  ஒரு மாணவன் நிலை தளர்ந்து மாற்றும்போது, சீனியர் மாணவன் அவனை ஒரு குச்சியால் அடிப்பதையும் மற்றவர்களையும் அடிக்கச் செல்வதையும் காணலாம் (டெக்கான் ஹெரால்டு, 23 ஆகஸ்ட் 2023). கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பில் இல்லாத போது, பொறுப்பு வழங்கப்பட்ட சீனியர், மற்றவர்களை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதுண்டு.  இந்த பொல்லாத சீனியர் மாணவன் போன்றதான ஒரு பொல்லாத வேலைக்காரனின் உவமையை கர்த்தராகிய ஆண்டவர் பகிர்ந்துள்ளார் (மத்தேயு 24:45-51).

பொல்லாத உக்கிராணக்காரன்:
எஜமானன் தன் வேலைக்காரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.  எஜமானன் வர இன்னும் காலங்கள் ஆகும் என்று நினைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டான்.  அவன் தனது எஜமானனுக்கு பயப்படவே இல்லை அல்லது தன்னைத் தண்டிக்கும் அதிகாரத்திற்கும் பயப்படவில்லை, அதுமாத்திரமல்ல உண்மைத்தன்மை இல்லாமல் இருந்தான்.

கசையடிகள்:
அவன் உடன் வேலைக்காரர்களை அடித்து, சித்திரவதை செய்தான்.  அவர்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும், கனத்துடனும் நடத்துவதற்குப் பதிலாக, பொல்லாத வேலைக்காரன் அவர்களை துஷ்பிரயோகம் செய்து, சுரண்டி, ஒடுக்கினான்.  தான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை, தனக்கு விருப்பமானதைச் செய்துவிடலாம் என்பது போல் நடந்து கொண்டான்.

மூர்க்கத்தனமான விருந்துகள்:
உடன் ஊழியர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு மகிழ்ந்த அவன், தனது தீய நண்பர்களுடன் வெற்றி விழாக்களைக் கொண்டாடினான்.  அவன் புசிக்கவும் குடிக்கவும் என இருந்தான், அவையெல்லாம் அவனுடைய எஜமானர்களாக இருந்தன.  உக்கிராணக்காரனாக இருப்பதற்குப் பதிலாக, அவன் அதைத் திருடி தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தினான்.  அவன் பொல்லாத நண்பர்களிடம் தாராளமாக இருந்தான், ஆனால் உடன் ஊழியர்களிடம் இரக்கம் காட்டவில்லை.

அழுகையும் பற்கடிப்பும்:
எஜமான் வந்ததும் கணக்கு கேட்பார்.  அவனை கடினமாய்த் தண்டித்து மாயக்காரரோடே அவனுக்கு பங்கை நியமிப்பார். மற்ற பொல்லாத அக்கிரமக்காரர்களுடன் சேர்ந்து, அக்கிரமான வேலைக்காரன் மற்றும் உக்கிரக்காரண் அக்கினிக் கடலில் வீசப்படுவார்கள், அங்கு அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.

நான் ஞானமும் உண்மையுள்ள உக்கிராணக்காரனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download