பந்தயம் போல் வாழ்க்கை

"ஆப்பிரிக்காவில் தினமும் காலையில், ஒரு அழகிய மான் எழுந்திருக்கும். வேகமான சிங்கத்தை விட தான் மிகவும் வேகமாக ஓட வேண்டும் அல்லது கொல்லப்படுவோம் என்று அதற்கு தெரியும். தினமும் காலையில் ஒரு சிங்கம் எழுந்திருக்கும். அது மானை விட அதிகமாக ஓட வேண்டும் அல்லது பட்டினியால் இறக்க நேரிடும் என்று சிங்கமும் அறியும். நீங்கள் சிங்கமா அல்லது மானா என்பது இப்போது முக்கியமில்லை. சூரியன் உதிக்கும்போது, உங்கள் ஓட்டம் தொடங்கிட வேண்டும். இந்த உருவகத்தில், இளைஞர்கள் உடன் மனிதர்களை விட , விலங்குகளை விட தங்கள் நிலையை குறைத்து விடுகிறார்கள். வாழ்க்கை என்பது உண்மையில் உயிர்வாழ்வதற்கான நோக்கமற்ற பந்தயமா? சிந்திப்போமா. 

1) வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது:
ஆம், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு பந்தயம். ஒரு தடகள வீரர் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும், முழு ஆற்றலையும் செலவழிக்க வேண்டும், பந்தயத்தில் போட்டியிட அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கவனச்சிதறல் மற்றும் இரட்டை எண்ணம் மிக ஆபத்தானது.

2) பாரமானவற்றை தூக்கி எறியுங்கள்:
ஒரு தடகள வீரர் நன்றாக ஓடி வெற்றி பெற உடல் தகுதியுடன் இருக்க வேண்டும், கொழுப்பை குறைக்க வேண்டும்; அதற்கான சீருடையை அணிய வேண்டும். எபிரெயர் 12:1ல் சொல்லப்பட்டது போல நம்மை நெருங்கி நிற்கிற பாவத்தையும் பாரமான யாவற்றையும் உதறி தள்ளி விட்டு நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் ஓட வேண்டும். 

3) ஒதுக்கப்பட்ட பாதை:
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஓடுவதற்கு ஒரு தடம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஒரு தடகள வீரர் பாதையை மாற்றினால், அந்நபர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். நாம் ஆண்டவரைப் பின்தொடரும்போது சுமந்து செல்வதற்காக, அவரவர்களுக்கென்ற தனித்துவமான சிலுவையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழங்கியுள்ளார். "ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா 9:23).

4) ஒரு நோக்கத்துடன் ஓடுங்கள்:
சில விளையாட்டு வீரர்களுக்கு, வெற்றியடைவது தனிப்பட்ட திருப்தி அல்லது உலகில் பிரபலமடையலாம் அல்லது தங்கள் தேசத்திற்கு பெருமையையும் மரியாதையையும் கொண்டு வரலாம் என்பது இருக்கும். ஆனால் தேவனுக்கு மகிமை சேர்ப்பதே நம் நோக்கம்.

5) வெற்றி பெற ஓடுங்கள்:
"பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" (1 கொரிந்தியர் 9:24) என பவுல் எழுதுகிறார். 

6) தடகள வீரரா அல்லது பார்வையாளரா?
ஒரு தடகள வீரர் எந்த நேரத்திலும் அரங்கில் நுழைய முடியாது, ஆனால் ஒரு பார்வையாளரால் முடியும். ஒரு விளையாட்டு வீரர் செயலில் இருக்கும்போது, அவர் ஆடை நெறிமுறையை  பின்பற்ற வேண்டும், ஆனால் பார்வையாளருக்கு எந்த ஆடையையும் அணியலாம். ஒரு தடகள வீரர் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியாது; ஆனால் பார்வையாளரால் எந்த நேரத்திலும் எந்த உணவையும் சாப்பிட முடியும். ஆயத்தமும் கடுமையான பயிற்சியும் ஒரு தடகள வீரருக்கு அவசியம், ஒரு பார்வையாளருக்கு அப்படி அல்ல.

7) விரைவோட்டமா மாரத்தானா?
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு விரைவோட்டமான பந்தயம் அல்ல. மாரத்தான் பந்தயத்தை போல நாம் மெதுவாக, சீராக, கவனம் செலுத்தி, விட்டுவிடாமல் (நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்) ஓட வேண்டும்.

நான் எனது பந்தயத்தை ஒரு நோக்கத்துடனும் சரியான கவனத்துடனும் ஓடுகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download