லெந்து தியானம்- நாள் 5

Mr. தூண்டிவிடுபவர் (1இராஜா. 21:1-10)

தூண்டிவிடுபவரா? தூண்டப்படுபவரா?


ஆகாப் தன் மனைவியை தூண்டி, நல்லவனும், தேவனுக்கு பயந்தவனுமான, தேவ மனிதனை கொலை செய்தாள். இருவரும் இப்படி பாவம் செய்தார்கள். 

நிலத்தை எடுத்துக் கொண்டவர்களால் நித்தியத்தை தொட முடியவில்லை. தேவன் அவனையும் அவன் மனைவியையும் நியாயம் தீர்த்தார்.

இந்நாட்களில், நிலத்தால், பல கிறிஸ்தவ குடும்பங்கள், ஸ்தாபனங்கள், திருச்சபைகள் சாட்சியற்ற நிலையில் இருக்கிறது. இவர்களை தூண்டிவிட்ட, தூண்டி விடுகிற, தூண்ட ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.

தூண்டிலில் புழுவை மாட்டி, அதை தூண்டி விட்டு மீன் பிடிப்பது போல் மற்றவரை தூண்டிவிட்டு நீங்கள் தப்பித்துக் கொள்ள நினைக்க வேண்டாம்.

தூண்டிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுபவர்கள் அநேகர் உண்டு. சாத்தான் பாவ எண்ணத்தை தூண்டிவிட்டு உங்களை பிடிக்க நினைக்கிறான். தப்பித்துக் கொள்ளுங்கள்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Lent Meditation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download