தலைவர்கள் மற்றும் மேலாளர்கள்

ஒரு மேலாளர் அவரது தலைவரிடம் இவ்வாறாக கேட்டார்; "அரசாங்க சட்ட நடபடிகளைப் பற்றி தெரியுமா... ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31க்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும், என்பது உங்களுக்குத் தெரியுமா...? அதற்கு தலைவர் பதிலளித்தார்; “எனக்கு ஒரே ஒரு நடபடிகள் மட்டுமே தெரியும், அது என்னவென்றால் அப்போஸ்தலர்களின் நடபடிகள். நிர்வாகி ஒருவர் அந்த விஷயங்களை எல்லாம் கவனித்துக்கொள்வதால், நான் வேதம், ஜெபம், தேவ வார்த்தையைக் கற்பித்தல், தலைவர்களுக்கு வழிகாட்டுதல், மக்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் நிறுவனத்தை மூலோபாயமாக வழிநடத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன் என்றார்."  அது உண்மையில் புத்திசாலித்தனமான பதில்தான்.   தரிசனத்தை நோக்கி வழிநடத்துதல், முன்செல்லுதல் மற்றும் தொடர்ந்து பணியாற்றுதல் என தலைமைக் கடமைகளில் கவனம் செலுத்துவதற்காக அப்போஸ்தலர்களும் தினசரி நிர்வாகத்திலிருந்து தங்களைத் தாங்களே பிரித்துக்கொண்டனர்.  “ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்” (அப்போஸ்தலர் 6:3-4).

ஆவிக்குரிய வரம்:
நிர்வாகம் என்பது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஆவிக்குரிய வரங்களில் ஒன்றாகும் (1 கொரிந்தியர் 12:28; ரோமர் 12:8). இது மக்களையும், வளங்களையும் ஒழுங்கமைத்து, ஒரு அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வரம்.  நிர்வாகிகள் அமைப்பு, நிறுவனம் அல்லது உள்ளூர் சபை திறம்பட செயல்பட உதவுகிறார்கள்.  ஒரு சில தலைவர்களுக்கு நிர்வாக திறன் உள்ளது, ஆனால் பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லை.

அழைப்பு:
இது ஊழியத்திற்கான திட்டவட்டமான அழைப்பு.  ஒரு நிர்வாகியின் வரங்களால் ராஜ்ய வேலை திறம்படவும் நேர்த்தியாகவும் செய்யப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.  அழைப்பும் வரமும் அவருடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்குமானது.  நிர்வாகிகள் அழைப்பில் திருப்தி அடையாதபோது, ​​தலைவர்களாக மாற முயற்சி செய்வது என்பது, அது சாத்தானின் ஆபத்தான பொறியாகும்.

மூன்று ஆபத்துகள்:
முதலில் , சில நிர்வாகிகள் தலைவர்களை மீற முயற்சிக்கின்றனர்.  தாவீது யோவாபை தனது நிர்வாகியாகவும், செயலாளராகவும், தளபதியாகவும் வைத்திருந்தான்.  தாவீது அப்னேருடன் சமாதானம் செய்ய விரும்பினான், ஆனால் தாவீதுக்குத் தெரியாமல் யோவாப் அவனைக் கொன்றான்.  யோவாப் மிகவும் வலிமையானவன் என்றும், தீயவனைக் தேவன் தண்டிப்பார் என்றும் தாவீது புலம்புகிறான் (2 சாமுவேல் 3:39). இரண்டாவது , சில நிர்வாகிகள் அநீதியான காரியங்களைச் செய்ய தலைவர்களைக் கையாளுகிறார்கள்.  ஆமான் இஸ்ரவேலின் இன அழிப்புக்கு சதி செய்தான்.  மூன்றாவது , சிம்ரி தனது எஜமானரான ஏலாவைக் கொன்று ஏழு நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டதால், சிலர் தங்கள் தலைவர்களை மாற்ற விரும்புகிறார்கள் (1 இராஜாக்கள் 16).

நான் எனது அழைப்பை அடையாளம் கண்டு, எனது வரம் எது என அறிந்துகொள்கிறேனா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download