தாமதமான நீதி; மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்

1981, டிசம்பர் மாதம், அன்று மாலை, சாஹுபூர் கிராமத்தில் உள்ள பிரேம்வதியின் வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்த ஒரு குழு, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 வயது சிறுமி மற்றும் பத்து மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.  அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.  42 ஆண்டுகளுக்குப் பிறகு, 90 வயதான கிராமவாசி ஒருவருக்கு மே 31, 2023 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவர் ஃபிரோசாபாத் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வைத்து இறந்துவிட்டார் (டைம்ஸ் ஆஃப் இந்தியா ஜூன் 3, 2023). "துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது" (பிரசங்கி 8:11).  

தேவ பயம் இல்லை:
வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, தேவ பயம் இல்லை.  மாறாக, அவர்கள் தாங்கள் விசேஷமானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள், அவர்கள் என்ன முடிவு செய்தாலும் அல்லது எது செய்தாலும் அது கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும், அது மற்றவர்களைக் கொல்வது உட்பட என நினைக்கிறார்கள்.

அரசுக்கு பயம் இல்லை:
எதையும் பொருட்படுத்ததாத வன்முறை தேவனின் சட்டத்தையும் நாட்டின் சட்டத்தையும் மீறுவதாகும்.  அரசாங்கத்தின் மீது மரியாதை இல்லை அல்லது சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஆட்சியாளர்கள் அறியப்பட்டவர்களாகவோ அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாகவோ இருந்ததால், ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும் இறந்தாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

 விளைவுகளுக்கு பயம் இல்லை:
 கொலையாளி தண்டிக்கப்படுவார், மரண தண்டனை கூட வழங்கப்படலாம் என்று சட்டம் அறிவிக்கிறது.  அவர்களுக்கு என்ன சட்டம் தெரியாதா? அல்லது சட்டத்தை அறியாமை என்பது ஒரு சாக்காக இருக்க முடியுமா?

 திமிர்:
 குற்றவாளிகள் ஆணவத்துடன் மற்றவர்களை சமமாகவோ அல்லது மனிதர்களாகவோ கருதவில்லை.  எனவே, மற்றவர்களுக்கு வாழும் உரிமை உட்பட எந்த உரிமையும் இல்லை.  மற்றவர்களை இழிவுபடுத்தும் மனப்பான்மை அவர்களை இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்ய வைத்தது.

நீதி செய்யும் தேவன்:
தேவன் நீதியை நேசிக்கிறார் என்று வேதாகமம் கற்பிக்கிறது.  இருப்பினும், மக்களும், சமூகமும், தேசங்களும் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சுரண்டப்பட்டவர்களுக்கும் நீதியை கசப்பானதாக மாற்றி விட்டார்கள்.‌ "நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள்" (ஆமோஸ் 5:7).  

நீதியை எளிதாக்குபவர்கள்:
தேவன் தம்முடைய மக்களை நீதியை எளிதாக்குபவர்களாகவும் நடைமுறைப்படுத்துபவர்களாகவும் இருக்கும்படி அழைக்கிறார். "நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்" (ஏசாயா 1:17).  "ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்" (சங்கீதம் 82:3‭-‬4). 

 நான் நீதியைப் போதிப்பவனாகவும், நீதியை முன்னெடுப்பவனாகவும் இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download