BMW என்ன தேவதூதனா?

 ஒரு போதகர் மற்றொரு போதகரிடம் “பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) கார்கள் தேவதூதர்களா?" என்பதாகக் கேட்டார். அதற்கு அவர்;   "இருக்கலாம்.  அவர்கள் எப்படி நம் சபைகளைச் சுற்றி வளைக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது".  மற்றொருவர் சொன்னார்: “எலிசாவுக்கு அக்கினி ரதங்களில் தேவதூதர்கள் இருந்தது போல, அவர்களும் நம்மோடு இருப்பார்கள்” (2 இராஜாக்கள் 6:17).  இது ஒரு நகரத்தில் நடந்த போதகர்களின் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிறகு, தொலைதூர கிராமங்களில் ஊழியம் செய்யும் ஏழை போதகர்களுக்கு இடையே நடந்த குழப்பமான உரையாடலாகும்.  நகரத்து போதகர், கருத்தரங்களில் கலந்துக் கொண்ட போதகர்களுக்கு ‘செழிப்பு தரிசனம்’ கொடுத்தார்.  அவர்களின் சபை பணக்காரர்களால் நிறைந்திருக்கும் என்றும், அவர்கள் பிஎம்டபிள்யூ மற்றும் ஆடிகளில் வருவார்கள் என்றும், அவர்களின் குழந்தைகள் தனியார் ஜெட் விமானங்களை வைத்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.  துரதிர்ஷ்டவசமாக, கிராமத்து போதகர்கள் கார்களுக்கான இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டதே இல்லை, அதனால் அதையெல்லாம் தேவதூதர்களின் பெயர்கள் என்று தவறாகக் கருதுகிறார்கள்.  இந்த கிராமத்து போதகர்களோ தங்கள் ஊழியத்தை செய்ய சைக்கிள் ஓட்டுகிறார்கள். அதில் ஏதோ ஒன்று அல்லது இரண்டு பேர் மோட்டார் பைக்குகள் வைத்திருக்கலாம்.  இவர்களது சபைக்கு இரண்டு வேளை உணவு என்பதே சவாலான காரியம், குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவது கூட சிரமம், அவர்களுக்கு உடைகள் உட்பட பல தேவைகள் இருந்தன.

1) பொருத்தமற்றது, ஊக்கமளிக்கவில்லை:
இந்தியாவிலும் உலகிலும் பெரும்பான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கு செழிப்பு பற்றிய உபதேசங்கள் என்பது பொருத்தமற்றது.  தவறான நம்பிக்கையை வழங்குவது நற்செய்தி பிரசங்கம் அல்ல.  சத்தியத்தின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அழிந்து வரும் உலகம் மற்றும் அதன் செல்வத்தின் மீது தங்கள் கண்களை வைக்க மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

2) குழப்பம் தானே தவிர ஆறுதல் இல்லை:
ஏழை கிறிஸ்தவர்கள் BMW பற்றி கேள்விப்பட்டதே இல்லை, அது அவர்களின் சொல்லகராதியிலும் இல்லை அல்லது அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை.   வருந்தத்தக்கது என்னவெனில், அவர்கள் கார்களை தேவதூதர்களுடன் குழப்பினர், மேலும் இது வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்கினி  ரதங்களைப் போலவே இருக்கலாம் என்பதாக தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர்,

3) வழிதவற செய்தனர்,  வழிநடத்தப்படவில்லை:
அவர்களுக்கு தேவ நோக்கத்துடன் கூடிய வாக்குத்தத்த வார்த்தைகளும், அவர்களுடைய விசுவாச வாழ்க்கைக்கு பொருத்தமான போதனைகளும், நீதியின் பாதையில் நடக்க வழிகாட்டுதலும் தேவைப்பட்டன.  இருப்பினும், அவர்கள் மாயைகளை நோக்கி திருப்பி விடப்பட்டனர்.

பொய்யான நம்பிக்கை என்பது ஒரு பழமொழியின் படி காற்றில் கோட்டைகளைக் கட்டுவது ஆகும்.  கர்த்தராகிய இயேசு போதித்தார்;  இத்தகைய முட்டாள்தனமான மனிதனால் தூண்டப்பட்ட போதனைகள் அடித்தளமான பாறை (கற்பாறை) அல்ல, ஆனால் மணல் மீது கட்டின வீடு போன்றது; அது அழிந்துபோகும்  (மத்தேயு 7:24-27). BMWக்கள், ஜெட் விமானங்கள், வீடுகள், கேஜெட்டுகள், மிகைப்படுத்தப்பட்ட கற்பனை ஆகியவற்றின் மேல் நிற்கும் செழுமை பற்றிய நம்பிக்கை அழிந்துவிடும்.

 வாழ்க்கையின் அடித்தளமாக தேவ வார்த்தை உள்ளதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download