இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த பிறப்பு

"பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர்"
யாத் 15:11

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால், உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். - லூக் 1:35

இந்த வசனத்தில் வரும் "பரிசுத்தஆவி" என்ற சொல் ஆவியானவரைக் குறிப்பிடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், கிரேக்க மொழியில் ஆவியானவரைக் குறிப்பிடும்போது முன்னதாக ஒரு 'சிறப்புச் சுட்டு' (Definite article) வரும்.
அது வராமல் இருந்தால் ஆவியானவரைக் குறிப்பிடாமல், அது அவருடைய செயல் அல்லது கிருபை வரத்தை அர்த்தப்படுத்தும்.
இதிலிருந்து தெரிவது என்ன?
புராணக் கதைகளில் வருவது போல, ஆவியானவர் ஆள்தத்துவமுடையவராய் மரியாளிடத்தில் சரீரப்பிரகாரமான ஓர் உறவு கொண்டதால் மரியாள் கர்ப்பவதியாகவில்லை. மாறாக, அந்த வசனத்தின் பின் பகுதியில் உள்ளதுபோல் ஆவியின் தெய்வீகச் செயலால் அவள் கர்ப்பவதியானாள்.
அங்கேயும் உன்னதமானவருடைய பலம் என்பதற்கும் 'சிறப்புச் சுட்டு'
(Definite article) இல்லை.
அப்படியானால் ஆவியின் செயல் எவ்விதம் இருந்தது?

"நிழலிட்டது" என்பதற்கான கிரேக்க வார்த்தை  ἐπισκιάζω ( episkeeadzo.) இது மத் 17:5, லூக் 9:34, மாற் 9:7 ஆகிய வசனங்களிலும் வருகிறது. அதே விதமான செயலில்தான் இதுவும் இருந்தது. 'அவள் மேல்' (επι ) upon thee.

நம் தேவன் தன்மையில் பரிசுத்தர், அவர் செயலில் பரிசுத்தர்.
புராணக் கதைகளின் அருவருப்பான ஆபாச பாலுறவிலிருந்து எவ்வளவு பெரிய வித்தியாசம் இதில் உள்ளதென்று பாருங்கள்.

வசனத்தின் இறுதியில் "ஆதலால்" உன்னிடத்தில் பிறக்கும் (பிறப்பது - சுட்டுச் சொல்" வருகிறது) பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன்  என்னப்படும். என்னப்படும் என்ற சொல்லின் பொருள் 'என அழைக்கப்படுவார், சத்தமாக, உரத்த குரலில் அழைக்கப்படுவார்' என்பதாகும்!

அவர் அவ்வாறே அழைக்கப்பட்டார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன்... என்று உரைத்தது. மத் 3:17.
"உன்னதமான தேவனுடைய குமாரனே... என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்". மாற்.5:7.

ஆம், இயேசு கிறிஸ்து பரிசுத்தமாகப் பிறந்த பரிசுத்த தேவகுமாரன்!

(இதன் ஆக்கியோன்)

கு.கெர்சோம் நப்தலி



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download