எரிச்சலுள்ள தேவன்

ஒரு கிராமத்தில், எப்போதும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் நீதிமான் ஒருவர் வாழ்ந்து வந்தார்.  அவர் மிகவும் பணக்காரர் அல்ல, ஆனால் பிரபலமானவர்.  மற்றொரு மனிதன் பணக்காரன், நீதிமான் மீது பொறாமைப்பட்டு, அவனைத் துன்புறுத்த முயன்றான்.  துரதிர்ஷ்டவசமாக, மக்கள் பணக்காரரிடம் செல்லத் தொடங்கினர், அவர் அவர்களை தவறாக வழிநடத்தி நீதிமானுக்கு எதிராகத் திருப்பினார்.  இவ்வளவு நல்ல காரியங்கள் மக்களுக்கு செய்தும் தான் தீயவராகக் கருதப்படுகிறோமே என மிகவும் வருத்தப்பட்டார்.  தகுதியான மரியாதையும் மதிப்பும் ஒரு பொல்லாத நபருக்கு நேராக தவறாக வழிநடத்தப்பட்டது.  ஒரு நாள், அவர் வேதாகமத்தைப் படித்தபோது, தேவனின் குணாதிசயங்கள் பற்றி, அதாவது எப்படி மற்றும் ஏன் தேவன் எரிச்சலுள்ளவராய் காணப்படுகிறார் என்பதான ஒரு புதுவிதமான புரிதல் ஏற்பட்டது.

எரிச்சலும் பொறாமையும்
எரிச்சல் வேறு பொறாமை வேறு.  ஒரு நபர் தனக்கு இல்லாதது வேறொருவரிடம் இருந்தால் பொறாமைப்படுவார்.  எரிச்சல் என்பது ஒருவருக்குச் சேர வேண்டியதை இன்னொருவருக்குக் கொடுப்பது ஆகும்.  ஆராதனை என்பது தேவனுக்கு மட்டுமே சொந்தமானது, அதை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்போது, தேவன் எரிச்சலடைகிறார்.

 வேறு தெய்வங்கள் இல்லையே
ஒரு தேவன் உண்டு, அவரே உண்மையான ஜீவனுள்ள தேவன்.‌  மற்ற அனைத்து கடவுள்களும் பொய்யானவை, கற்பனை அல்லது கட்டுக்கதை அல்லது புராணத்தின் உருவாக்கம் அல்லது மனிதர்களை தெய்வமாக்குதல்.  எனவே, மற்ற கடவுள்களை வணங்குவதன் மூலம், மக்கள் உண்மையான கடவுளை எரிச்சலடைய தூண்டுவார்கள் என்று தேவன் எச்சரித்தார்.  "கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்" (யாத்திராகமம் 34:14). இது குழந்தைத்தனமான பொறாமையோ அல்லது எரிச்சலோ அல்ல, ஆனால் மக்களின் தவறான தெரிவுகளுக்கு எதிரான நியாயமான கோபம்.

 பட்சிக்கிற அக்கினி
 மக்கள் முட்டாள்தனமான வழிகளைத் தேர்ந்தெடுக்கும்போது தேவன் எரிச்சலடைவதில்லை.  மனிதன் உருவாக்கிய தெய்வங்களை மற்றும் புதுமையான படைப்புகளை மக்கள் தேர்ந்தெடுக்கும்போது, தேவன் அவர்கள் மீது தண்டனையையும் தீர்ப்பையும் கொண்டு வருவார், ஏனெனில் அவர் "பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்" (உபாகமம் 4:24).  

 தீர்ப்பு
 யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தமான வாழ்க்கை நடத்தும்படி அறிவுறுத்துகிறார்.  தேவன் பரிசுத்தமானவர், அவர் பாவத்துடன் ஒப்புரவாக மாட்டார்.  பரிசுத்தமும் எரிச்சலும் உள்ள தேவன் மனந்திரும்பத் தவறிய பாவிகளை நியாயந்தீர்ப்பார் (யோசுவா 24:19).

 எதிரிகளைச் சரிகட்டுகிறவர்
எரிச்சலுள்ள தேவன் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவராகவும் இருக்கிறார் (நாகூம் 1:2). சாத்தான், தேவனுக்கு மட்டுமே சொந்தமான வழிபாட்டை அவனுக்கு நாடினான், நிராகரிக்கப்பட்டான் மற்றும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான்.  சாத்தான் சத்தியத்தை அறியாதபடி மக்களைக் குருடாக்கி அவர்களை அடிமைகளாக்குகிறான். தேவன் சாத்தானையும், விழுந்த தேவதூதர்களையும், சத்தியத்தையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், அவருடைய கிருபையையும் நிராகரிப்பவர்களையும் நியாயந்தீர்ப்பார்.

 ஆவி, ஆத்துமா, சரீரம் என என்  முழுமையையும் அர்ப்பணித்து அவரை மாத்திரம் தொழுது கொள்ளுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download