தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்

எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயம் செருபாபேல் மற்றும் எஸ்றா ஆகியோரால் மீண்டும் கட்டப்பட்டது  (எஸ்றா 6:15). இது ஏரோதுவால் விரிவுபடுத்தப்பட்டது.  ஏரோது ஆலயப் பகுதியை 36 ஏக்கராக (150000 சதுர மீட்டர்) இரட்டிப்பாக்கினான். ஏரோதின் திட்டம் கிமு 19 இல் தொடங்கியது மற்றும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அழிக்கப்பட கிபி 63 இல் மட்டுமே முடிக்கப்பட்டது.

சிலை வழிபாடு:
யூதர்களுக்கு அது அவர்களின் மத வாழ்க்கையின் மையமாக இருந்தது.  பல யூதர்கள் ஆலயத்தின் மீது சத்தியம் செய்வது, ஆலயத்திற்கு எதிராக பேசுவது தெய்வ நிந்தனையாக கருதப்பட்டது (மத்தேயு 23:16; அப்போஸ்தலர் 6:13). அதாவது சொல்லப்போனால், தேவனோ அல்லது அவருடைய பிரமாணங்களையோ விட ஆலயம் முக்கியமானதாக மாறியது.  பாபிலோனிய சிறையிருப்பிற்குப் பின்னர் அவர்கள் புறஜாதி தெய்வங்களை வணங்குவதை விட்டனர், ஆனால் எருசலேம் ஆலயத்தை தங்கள் நம்பிக்கையின் பொருளாக ஆக்கினர்.

சுவாரசியமான வடிவமைப்பு:
உண்மையாகவே, ஆலயம் ஒரு ஈர்க்கக்கூடிய அமைப்பு ஆகும்.  ஆலயத்தின் வெளிப்புறத்தில் தங்கத் தகடுகளால் மூடப்பட்டிருப்பதாக சரித்திர ஆசிரியனாகிய ஜொசிபஸ் கூறியுள்ளார்.  சூரியப் பிரகாசத்தின் போது ஆலயம் தக தக என மின்னுவது ஒரு அற்புதமான காட்சி. தங்கத் தகடுகள் இல்லாத இடங்களில், அவை வெள்ளைப் பளிங்குக் கற்களால் மூடப்பட்டிருந்தன. அது தூரத்திலிருந்து பார்க்க பனி போல் தோன்றியது.

சுத்தப்படுத்தப்பட்ட ஆலயம்:
வணிக அங்காடி போல் மாறிய ஆலய வளாகத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தூய்மைப்படுத்தினார். ஆசாரியர்கள் பலியிடக் கொண்டுவரப்பட்ட விலங்குகளை வேண்டுமென்றே நிராகரித்தார்கள், பின்னர் அவற்றை இந்த ஆசாரியர்களே நடத்தும் சந்தையில் விலைக்கு வாங்கும்படி கட்டாயப்படுத்தினர்.  புலம்பெயர் யூதர்கள் வந்து வழிபட்டு வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு வந்தபோது பணப் பரிமாற்ற வியாபாரமும் செழித்தது. ஜெப வீடு  திருடர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று ஆண்டவர் கூறினார் (மத்தேயு 21:12-13).

 பெரியவர்:
கர்த்தராகிய இயேசு தாம் கம்பீரமான ஆலயத்தை விட பெரியவர் என்று கூறினார் (மத்தேயு 12:6). மேலும் ஒரு கல்லின் மேல் மற்றொரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும் என்று கர்த்தர் தீர்க்கதரிசனம் உரைத்தார் (மாற்கு 13:2: மத்தேயு 24:2).

  ரோமர்கள் கிளர்ச்சியை நசுக்குதல்:
 கி.பி 70 இல் யூதர்களின் கிளர்ச்சி ரோமானியர்களால் இரக்கமின்றி நசுக்கப்பட்டது.  1.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், 97000 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.  சில யூதர்கள் (சுமார் 6000) ரோமானியர்களின் கோபத்திலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள ஆலயத்திற்குள் சென்றார்கள், அங்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பினார்கள்.

 கற்கள் அகற்றப்படல் :
 ஆலயத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்திருக்கும் போது, அங்கு குடிபோதையில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் தீ வைத்து கொளுத்தினார்.  தங்கம் உருகி கற்களின் விரிசல்களுக்கு இடையே சென்றது.  ரோமானியத் தளபதி தனது வீரர்களுக்கு தங்கத்தை மீட்டெடுக்க கற்களை அகற்ற உத்தரவிட்டார்.

 தேவன் மாத்திரம் தான் என் கவனமா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download