சுருளிலிருந்து டிஜிட்டல் வரை

தொழில்நுட்பம் முன்னோக்கி நகர்கிறது. புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை, சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையிலும் அதன் தாக்கங்கள் காணப்படுகிறது. மோசேயிடம் இரண்டு கற்பலகைகளைக் கொண்டு வரும்படி தேவன் கட்டளையிட்டார், அதில் கட்டளைகளை எழுதினார். அது அப்போதைய எழுத்துத் தொழில்நுட்பம் எனலாம்.  தீர்க்கத்தரிசியாகிய எரேமியாவின் காலத்தில், அது சுருள்களாக இருந்தது.  பவுலும் லூக்காவும் கூட சுருள்களில் எழுதினார்கள்.  தேவனுடைய வார்த்தை தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்களால் ஒரு நேரத்தில் ஒரு பிரதியாக நகலெடுக்கப்பட்டது.  முழு வேதாகமம் சுருள்களால் நிறைந்திருந்தால் வீடு முழுமையும் சுருள்களை மட்டும் தான் வைத்திருக்க முடியும் அதில் குடும்பத்தினர் வாழ்வது எப்படி!  அதுபோல சுருள்களின் நகலை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், சராசரி ஊதியம் பெறுபவர் தன் வாழ்நாள் முழுவதும் சேமிக்க மட்டும் தான் முடியும்.

அச்சிடும் தொழில்நுட்பம் அச்சிடலை மலிவாகவும் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையிலும் மாற்றுகிறது. ஆக, முழு வேதாகமத்தையும் பைகளில் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். அது சுமார் 500 ஆண்டுகளாக உலக கிறிஸ்தவத்தையே மாற்றியுள்ளது.  ஆம், சீஷத்துவத்தின் அடையாளம் என்பது வேதாகமத்தை எப்போதும் எடுத்துச் செல்வதாகும். ஒரு கிறிஸ்தவராக எப்போதும் வேதாகமத்தை எடுத்துச் செல்வது பற்றி பல மேற்கோள்கள் கூட உண்டு.  பயணத்தின் போது வேதாகமத்தைப் படிக்கும் தேவபக்தியுள்ள மக்களை நம்மால் காண முடியும், அது பரிச்சயமான ஒன்றுதான். அதுமாத்திரமல்ல இது ஒரு புதிய பழக்கமும் அல்ல, எத்தியோப்பிய மந்திரி கூட தன் இரதத்திலே உட்கார்ந்து ஏசாயா தீர்க்கத்தரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தானே (அப்போஸ்தலர் 8:28).

இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டது.  அதிக தகவல்தொடர்புகள் டிஜிட்டலில் மற்றும் ஊடகங்கள் கூட டிஜிட்டல் ஆகிவிட்டன.  இந்த சூழலில், ஸ்மார்ட்போன்கள், ஐபேட், லேப்டாப் ஆகியவற்றில் வேதாகம செயலியாக வைத்திருப்பது சாத்தியமாகின்றது. அதிலும் எந்தவொரு நபரும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் முழு வேதாகமத்தையும் பல பதிப்புகளிலும் தங்களுக்கு தேவையான மொழிகளிலும் வைத்துக் கொள்ள முடியும். ஔி இல்லாத இடத்தில் கூட,  இரவு நேரம் உட்பட எந்த நேரத்திலும் படிக்க முடியும். மேலும், டிஜிட்டல் வடிவத்தில் ஏராளமான வேதாகம விளக்கவுரைகள் இலவசமாக கிடைக்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக, அச்சிடப்பட்ட வேதாகமம் மட்டுமே புனிதமானது என்று சிலர் கூறுகிறார்கள்.  அச்சிடப்பட்ட வேதாகமம் வெளியிடப்பட்டபோது சுருள்கள் மட்டுமே புனிதமானவை என்று மக்கள் இருந்தனர்.  இருப்பினும், அச்சிடப்பட்ட வேதாகமம் உண்மையாகி, அது பல வீடுகள், நிறுவனங்கள் மற்றும் நூலகங்களைச் சென்றடைந்தது.  இப்போது, வேதாகமத்தின் டிஜிட்டல் வடிவம் அனைத்து நபர்களையும் சென்றடைய முடியும், இது பெரியளவில் எல்லையை பெரிதாக்கும்.

தொழில்நுட்பத்தைத் தழுவி, அதை பரவி மற்றும் அன்றாட விநியோகத்திற்குப் பயன்படுத்துவது ஞானமான செயலாகும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பதும், இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருப்பதும் மிக மிக அவசியம், அது இதன்மூலம் சாத்தியமும் கூட (சங்கீதம் 1:1-3).

நான் தினமும் வேதாகம சத்தியங்களைப் படித்து, தியானித்து, அநுதினமும் அப்பியாசப்படுத்துகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download