நாற்பது ஆண்டுகளாக கற்றல்!

"மோசே தனது முதல் நாற்பது ஆண்டுகளில் தன்னை யாரோ ஒருவன் என்பது போல் நினைத்துக் கடந்து கொண்டிருந்தான். அவன் தனது இரண்டாவது நாற்பது வருடங்களை தான் ஒன்றுமே இல்லை என்ற எண்ணத்தில் கழித்தான். அவன் தனது மூன்றாவது நாற்பது ஆண்டுகளை தேவன் ஒன்றுமில்லாதவனைக் கொண்டும் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதில் செலவிட்டான்” என்றார் டி.எல்.மூடி.‌ நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் மோசே என்ன செய்தான்? பறவைகளைப் பார்ப்பது, ஆடுகளைப் பின்தொடர அழைப்பது, வழிதவறிய ஆடுகளை அதட்டுவது, பழைய பாடல்களைப் பாடுவது, தனது வாழ்க்கையைப் பற்றி, பெற்றோர்கள், சகோதரர், சகோதரி மற்றும் பிறரைப் பற்றி சிந்திப்பது என்பதாக தான் இருந்ததா? இது அவனது ஜனங்களின் மேய்ப்பனாக மாறுவதற்கான உருவாக்கம், ஒரு ஆவிக்குரிய உருமாற்றம் (யாத்திராகமம் 3:1). 

தன்னை சார்ந்தா அல்லது தேவனைச் சார்ந்தா:
ராயல் எகிப்திய அகாடமி வழங்கிய பயிற்சி உலகிலேயே சிறந்ததாகக் கருதப்பட்டது.  மோசே இங்கே சிறந்து விளங்கினான் மற்றும் அவன் எகிப்தின் சார்பாக பல இராணுவ யுத்தங்களை வழிநடத்தினான்.  ஆகையால் அடிமையான எபிரேயர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தன்னால் முடியும் என்று அவன் நினைத்தான். ஆனால் கர்த்தர் இல்லாமல் அவனால் எதுவும் செய்ய முடியாதே (யோவான் 15:5).

திறன் அல்லது உணர்திறன்:
மோசே ஒரு சிறந்த தலைவன் என்று நினைத்தான், அவனுக்கு திறன், ஆற்றல் மற்றும் திறமை தேவை.  அவன் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.  இப்போது, தேவக் கட்டளை, அதிகாரம், ஞானம் மற்றும் வியூகத்தை விசுவாசத்தால் பெற வேண்டும் என்று மோசே கற்றுக்கொண்டான்.

 நாகரிகத்திலிருந்து வனாந்திரத்திற்கு:
ஒரு மேய்ப்பனாக மோசே தண்ணீர்  கிடைக்கும் இடத்தைக் கண்டறிவது, தூங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வது, வனவிலங்குகள் பற்றிய விவரங்கள், வாழ்க்கையைத் திட்டமிடுதல் என மக்களை வழிநடத்தும் விலையேறப்பெற்ற அறிவைக் கற்றுக்கொண்டான்.

பெருமை அல்லது பணிவு:
மோசே மனத்தாழ்மையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.  அவன் இளவரசனாக இருந்தவன், இப்போது வனாந்தரத்தில் யாருமற்றவன் ஆனான். அவனது மாமனாரின் மந்தையை மேய்ப்பவனாக இருக்கும் ஒரு வாரிசு.

பெரிய வேலையா அல்லது சிறிய வேலையா:
 எபிரேயர்களின் கிளர்ச்சியைத் தூண்டி எகிப்தைத் தூக்கியெறிய ஒரு இராணுவத் தந்திரவாதி போல் செயல்படலாம் என மோசே நினைத்தான்.  ஆனால் தேவன் அவனுக்கு ஒரு பெரிய வேலையைக் கொடுக்க விரும்பினார்.  தேவனை ஆராதிப்பது எப்படி மற்றும் கூடாரத்தை உருவாக்குவது எப்படி என இஸ்ரவேலுக்கு கற்பிப்பதற்கான ஆவிக்குரிய பரிமாணம், மேலும் வாக்களிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தும் புவியியல் பரிமாணம்;  தார்மீக, சிவில், சடங்கு மற்றும் சுகாதாரம் பற்றிய சட்டங்களை வழங்குவதற்கான ஒழுங்கின் பரிமாணம் மற்றும் நிலம், வருவாய்கள், உரிமைகள், சலுகைகள் மற்றும் கடமைகளின் உடைமையின் தனிப்பட்ட பரிமாணம் என பணி பெரிதாக காணப்பட்டது.‌

விசுவாசத்தின் அடிப்படையில்:
அந்த நாற்பது ஆண்டுகளில் மோசே விசுவாசத்தில் வளர்ந்தான், அவன் பார்வோனின் மகளின் மகன் என்ற அடையாளத்தை தவிர்த்தான்;  தற்கால ஆடம்பரத்தையும் வாழ்க்கையின் எளிமையையும் விட தேவ ஜனங்களோடு பாடு அனுபவிப்பதைத்  தேர்ந்தெடுத்தான்;  எகிப்தின் வெகுமதிகள் மற்றும் பொக்கிஷங்களை விட கிறிஸ்துவின் நிந்தையையும் சிலுவையையும் தேர்ந்தெடுத்தான் (எபிரெயர் 11:23-26).

 நான் உபத்திரவத்தின் பள்ளியில் என்ன கற்றுக் கொள்கிறேன்?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download