தகுந்த கிருபை

தேவ கிருபை அற்புதமானது மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. அந்நபரின் தேவைகள், சூழல் மற்றும் தேவனின் உயர்ந்த நோக்கம் ஆகியவற்றின் படி அவருடைய கிருபை வெளிப்படுகிறது.  ஏதேன் தோட்டத்தில் மனித வீழ்ச்சியால் சாபத்தின் விளைவாக நோய், வலி ​​மற்றும் துன்பம் என்பது உலகில் வாழும் வரை வாழ்வின் ஒரு பகுதியாக மனிதனுக்கு அளிக்கப்பட்டது.  ஆதாம் மற்றும் ஏவாளின் மரபு உலகின் அனைத்து அம்சங்களையும், அதன் அமைப்புகள் மற்றும் கட்டமைப்பையும் ஊடுருவிச் செல்கிறது.  மூன்று சம்பவங்களை இதற்கு மாதிரியாக எடுத்துக் கொள்வோம்; ஒரே மாதிரியான உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தனர், ஆனால் கிருபையின் வெவ்வேறு செயல்பாடுகளை அனுபவித்தனர்.

அதிசய சுகம்:
டெல்லியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு இளம் பெண் தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.  ஏழ்மையான குடும்பம் என்பதால், எந்த சிகிச்சையும் எடுக்க முடியவில்லை.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய நண்பர் ஒருவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் வைத்து ஜெபிக்கும்படி அவளுக்கு தெரிவித்தார்.  எப்படி ஜெபிப்பது என்று தெரியவில்லை, ஆதலால் அவள் கர்த்தருடைய பெயரை சொல்லிக் கூப்பிட்டாள், அவள் அற்புத சுகத்தைப் பெற்றுக் கொண்டாள் (ரோமர் 10:13). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் குணப்படுத்தும் வல்லமை மற்றும் கிருபையைப் பற்றி அவள் பலமாக மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்கிறாள்.

சிகிச்சை:
தேவன் உலகத்தை வளங்களால் ஆசீர்வதித்துள்ளார்.  அவர் மக்களுக்கு அறிவையும் ஞானத்தையும் தருகிறார்.  அத்தகைய அறிவைக் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.  ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 22 ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் இருக்கிறார்.  வீட்டிலேயே டயாலிசிஸ் செய்யும் மற்றொரு பணித் தலைவர் உலகளவில் பல நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்கிறார்.  அவர்களுடைய பலவீனங்களில் தம்முடைய வல்லமை வெளிப்படும்படி, தேவன் தம்முடைய கிருபையை இவர்களுக்குப் போதுமானதாக ஆக்கினார் (2 கொரிந்தியர் 12:9).

மரணம்:
சிறுநீரக செயலிழப்பால் இறந்த சில விசுவாசிகள் உள்ளனர்.  இது விசுவாசத்தின் குறைபாடல்ல, ஆனால் தேவனின் திட்டம் மற்றும் நோக்கத்தின்படி இப்படியாகிறது.  பூமியில் உள்ள நேரம் ஒவ்வொரு நபருக்கும் தேவனால் தீர்மானிக்கப்படுகிறது.  தேவன் ஒருவரை அழைக்கும் போது, ​​அவருக்கு ஒரு திட்டவட்டமான காலக்கெடு திட்டம் உள்ளது.  எந்த வயதிலும், குழந்தைகள், இளம், நடுத்தர வயது, முதியவர்கள் அல்லது மூத்த குடிமக்கள் என தேவன் தம் விருப்பம், திட்டம் மற்றும் நோக்கத்தின்படி அவர்களைத் தம் நித்திய இல்லத்திற்கு அழைக்கிறார்.  உலகத் தரத்தின்படி இளமையாக இருக்கும்போதே இறந்தவர்களுக்குக் தேவன் கிருபை செய்கிறார்.  எந்த வயதிலும் அல்லது நிலையிலும் கர்த்தருக்குள் மரிப்பவர்கள் பாக்கியவான்கள் (வெளிப்படுத்துதல் 14:13).

இந்த விளங்கிக்கொள்ள முடியாத கிருபையை நான் என் வாழ்வில் அனுபவிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download