சபையில் காலணி அணிகிறீர்களா?

ஒரு நபர் தனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்த மற்றொரு ஊருக்குச் சென்றார்.  அது அவருடைய கலாச்சாரம் மற்றும் மொழியிலிருந்து வேறுபட்டது.  எப்படியோ ஒரு சபையைக் கண்டுபிடித்து அங்கே சென்றார்.  ஆராதனை ஒழுங்கைக் கண்டு அவர் குழப்பமடைந்தார், மேலும் கலந்துகொண்ட மக்கள் சபைக்குள் காலணிகளுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்தார்.   ஆராதனை முடிந்ததும், அவர் சில சபை உறுப்பினர்களுடன் உரையாடினார்.   சபைக்குள் காலணி அணிந்ததற்கு அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.  அப்போது சபை உறுப்பினர் ஒருவர்; “ஐயா, எங்கள் கிராமங்களில் குறிப்பிட்ட தெருக்களில் நடக்கும்போது செருப்பு அணிந்து செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. அதை எங்கள் தலையில் சுமக்க வேண்டியிருந்தது.  இங்கே நாங்கள் எங்கள் காலணிகளுடன் வரவேற்கப்பட்டு இந்த பெஞ்சுகளில் உட்கார அனுமதிக்கப்பட்டோம்.  ஐயா இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்” எனக் கூறினார்.

முக்கியமானவை மற்றும் அத்தியாவசியமற்றவை 
கிறிஸ்தவ விசுவாசத்தில், சில முக்கிய அத்தியாவசியங்களை சமரசம் செய்ய முடியாது.   உதாரணமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரிலான இரட்சிப்பு, தேவனுடைய வார்த்தையாக வேதாகமம், கன்னிப் பிறப்பு, சிலுவையில் அறையப்படுதல், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் மற்றும் இரண்டாம் வருகை.  ஆனால் மற்ற விஷயங்களில், தெரிவு சுதந்திரம் உள்ளது.   ஆராதனை முறைகளைப் பயன்படுத்துதல், ஆராதனை முறைமைகள், பிரசங்கப் பாணி, போதகர்களுக்கான சிறப்பு உடை அணிதல், தரையில் அல்லது பெஞ்சில் உட்காருதல் போன்றவை.   மற்ற விசுவாசிகள் மீது தேவையில்லாதவற்றை திணிப்பது சரியல்ல.   யூத விசுவாசிகள் சீஷர்களாக மாறுவதற்கு முன்பு புறஜாதிகள் யூதர்களாக மாற வேண்டும் என்று விரும்பினர், அதை பவுல் எதிர்த்தார்.   எருசலேம் ஆலோசனைச் சங்கம் யூத மரபுகள், சட்டம் மற்றும் ஆவிக்குரிய காரியங்களை புறஜாதி விசுவாசிகள் மீது திணிக்க வேண்டாம் என்று முடிவு செய்தது (அப்போஸ்தலர் 15). 

மோசே மாதிரியா? 
மோசேவின் காலணிகளைக் கழற்றச் சொன்னதை சிலர் மேற்கோள் காட்டுகிறார்கள் (யாத்திராகமம் 3:5). அதே மோசேதான் பஸ்காவை ஆரம்பித்தார், இது ஒரு பரிசுத்த பண்டிகை, இது கர்த்தரை பஸ்கா ஆட்டுக்குட்டியாக சுட்டிக்காட்டுகிறது.   விடுவிக்கப்பட வேண்டிய அடிமைகளுக்கு தேவன் கட்டளையிட்டபடி மோசே அறிவுறுத்தினார்.  “அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா” (யாத்திராகமம் 12:11).

புறத் தூய்மையா அல்லது அகப் பரிசுத்தமா? 
மதத்தின் வெளிப்புற வடிவங்களை விட நீதி, இரக்கம் மற்றும் விசுவாசம் ஆகியவை முக்கியம் (மத்தேயு 23:23).

நான் அத்தியாவசியமானவற்றில் கவனம் செலுத்துகிறேனா அல்லது அவசியமற்றதில் திசைதிருப்பப்படுகிறேனா? 

 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download