டிஜிட்டல் மரணம்

சில நாடுகள் டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டைகளை வழங்கியுள்ளன.   இந்த அட்டைகளில் மைக்ரோசிப்கள் உள்ளன மற்றும் அவை அரசாங்கத்தின் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.   இது சுகாதாரம், கல்வி, நிதி (வங்கி), காப்பீடு, வேலை, பயணம் (பாஸ்போர்ட்), வீட்டு உரிமை... போன்ற அனைத்து தரவுத்தளங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.   ஒரு நாட்டில் சில நபர்கள் தாங்கள் உயிரோடு இருந்தும் தங்கள் கார்டுகள் செயல் இழக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.   அதனால், அவர்களால் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட எந்தச் சேவையையும் பெற முடியவில்லை.   அதாவது அவர்கள் சரீர ரீதியாக ஆரோக்கியமாக இருந்தாலும் டிஜிட்டல் மரணத்தை அனுபவித்தார்கள்.   அது அரசாங்கத்தின் தண்டனையாக இருக்கலாம்.  டிஜிட்டல் மரணம் என்றால் அந்நியப்படுத்தப்படல் மற்றும் கைவிடப்படல் ஆகும். ஆனால் இரண்டாவது மரணத்தை விளைவிக்கும் ஆவிக்குரிய மரணம் மிகவும் ஆபத்தானது.

ஆவிக்குரிய மரணம்:  
தேவன் முதல் ஜோடி ஆதாம் மற்றும் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் வைத்தார்.   அவர்கள் தோட்டத்தின் அனைத்து பழங்களையும் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டனர், ஆனால் ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழங்களை சாப்பிட தடை விதிக்கப்பட்டது, அதை அவர்கள் சாப்பிட்டால், அவர்கள் இறந்துவிடுவார்கள் (ஆதியாகமம் 2:16-17). பாம்பு வடிவில் இருந்த சாத்தான் அவர்களை ஏமாற்றியதால் அவர்கள் சாப்பிட்டார்கள்.   சாத்தான் வாக்கு கொடுத்தபடி அவர்கள் கடவுளைப் போல ஆகவில்லை, ஆனால் தாங்கள் நிர்வாணமாக்கப்பட்டதைக் கண்டார்கள் (ஆதியாகமம் 3:4-17). ஆம், அவர்கள் உடல் ரீதியாக இறக்கவில்லை, ஆனால் ஆவிக்குரிய ரீதியில் இறந்தனர்.   டிஜிட்டல் உலகில், டிஜிட்டல் மரணம் என்பது அரசாங்கத்துடனும் மற்றவர்களுடனும் உள்ள அனைத்து தொடர்புகளையும் இழப்பதாகும். ஆவிக்குரிய மரணம் என்பது நம்மை படைத்த தேவனிடமிருந்து, பரலோகத் தேவனின் அன்பிலிருந்து, பரலோக பிதாவை நேசித்தலில் இருந்து துண்டிக்கப்படுதல் மற்றும் மற்றவர்களுடனும் சுற்றுச்சூழலுடனும் திசைதிருப்பப்பட்ட நிலை ஏற்படுகின்றது. 

மறுபடியும் பிறத்தல்: 
ஆதாம் மற்றும் ஏவாளின் வழித்தோன்றல்களாக, எல்லா மனிதர்களும் சாத்தானால் கண்மூடித்தனமாக, ஆவிக்குரிய ரீதியில் இறந்து, ஆவிக்குரிய இருளில் வாழ்கின்றனர் (2 கொரிந்தியர் 4:4).  தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கன்னிப் பெண்ணின் வயிற்றில் பிறந்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.  தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் சார்பாக இறந்தார் என்று நம்புகிறவர்கள், பாவங்களை கைவிடுபவர்கள் மீண்டுமாய் பிறக்கிறார்கள் . அப்போது அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் மற்றும் உண்மையோடும் ஆவியோடும் தொழுது கொள்ளுகிறார்கள்.  

இரண்டாவது மரணம்: 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் இவ்வுலகில் சரீர மரணம் அடைவார்கள், அவருடைய ஆத்மா இரண்டாவது மரணமான அக்கினியும் கந்தகமும் எரியும் கடலில் வீசப்படும். 

 நான் கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருக்கிறேனா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download