குற்றம் சார்ந்த பொழுதுபோக்கு

குற்றம் அல்லது திகில் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, சிலர் தங்கள் வாழ்க்கையிலும் அதை பின்பற்றுகிறார்கள்.  துரதிர்ஷ்டவசமாக, மோசமான மாதிரிகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் சமூகத்தில் புதிய குற்றவாளிகள் உருவாகிறார்கள்.  உண்மையான குற்றத்திற்கான வேட்கை குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது.  மாறாக, இது நவீன பொழுதுபோக்கு அம்சத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது (டெக்கான் ஹெரால்ட், 23 டிசம்பர் 2023). பழங்காலத்திலிருந்தே, ஆவிக்குரிய சத்தியங்கள், தார்மீக மதிப்பீடுகள் மற்றும் நற்பண்புகளைப் போதிக்க கதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இருப்பினும், நவீனத்துவத்திற்குப் பிந்தைய ஆவேசத்தில் எதிர்மறை, குற்றவியல், மற்றும் ஆபத்தான கதைகள் அழிவுகரமான கதைகளாகும்.  சமூக ஊடகங்களில் துரோகத்தைக் கொண்டாடும் காமக் கதைகள் வலம் வருகின்றன, முந்தைய சகாப்தத்தின் காதல் கதைகள் விசுவாசத்தைக் கருப்பொருளாகக் கொண்டதாக வரவேற்பைப் பெற்றதாகவும் பார்க்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கதைகள்:
ஏசோப்பின் கட்டுக்கதைகள் குழந்தைகளுக்கான பிரபலமான இலக்கியம்.  மிகப் பரவலாக, பலரால் அறியப்பட்ட ஆமையும் முயலும் கதை இதைத்தான் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏசோப் ஒரு அடிமையாக வாழ்ந்தார் மற்றும் கிறிஸ்துவுக்கு முன் 620 மற்றும் 564 இல் பண்டைய கிரேக்கத்தில் கதைசொல்லியாக இருந்தார்.

உவமைகள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உவமைகள் மூலம் கற்பித்தார் (மத்தேயு 13:10-12). உவமைகள் பூமிக்குரிய உருவங்களாகவும் நித்தியமான, ஆவிக்குரிய மற்றும் உள்ளார்ந்த உண்மைகளை வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுகளாகவும் இருந்தன.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் மூன்றில் ஒரு பங்கு உவமைகளாக இருந்தது.  சில அறிஞர்கள் நான்கு சுவிசேஷங்களிலிருந்து சுமார் 46 உவமைகளை பட்டியலிடுகின்றனர்.  அவை பிரபலமாக இருந்தன, நினைவில் கொள்ள எளிதானவை, மேலும் தினசரி ஜீவியத்திற்கான ஆவிக்குரிய சத்தியத்தையும் கொள்கைகளையும் தெரிவித்தன.

பேய் கதைகள்:
பன்னிரண்டு வயதுடைய ஒரு பெண் பேய் கதைகள் அடங்கிய புத்தகத்தை சபைக்கு கொண்டு வந்தபோது ஒரு போதகர் திகைத்துப் போனார்.  சலித்து போகும் போது இக்கதையைப் படிப்பேன் என்றாள். குழந்தைகள் கூட இதுபோன்ற கதைகளைப் படிக்க விரும்புகிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயமே.

கேலிச் சித்திரங்கள் :
துரதிர்ஷ்டவசமாக, கார்ட்டூன் திரைப்படங்கள் உயர்ந்த கருப்பொருள்களைக் கொண்டிருக்கவில்லை.  மாறாக பொய்கள், ஏமாற்றுதல், வன்முறை, இரக்கமற்ற தன்மை மற்றும் மிருகத்தனம் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.  குழந்தைகள் பூங்காக்கள் LGBTQ இன் நிகழ்ச்சி நிரலான பாலின நடுநிலைமையை ஊக்குவிக்கின்றன.

குற்றவியல் மனப்பான்மை:
குழந்தைகளும் இளைஞர்களும் சுற்றியிருக்கும் உறவுகளோடு ஜனங்களோடு பேசி பழகுவதைக் காட்டிலும் திரைகளுடன் தொடர்புகொள்வதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.  குழந்தைகளை நோக்கமாகக் கொண்டாலும், பல பொழுதுபோக்குகளின் உள்ளடக்கம் அவர்களுக்கு உலக விழுமியங்களைக் கற்பிப்பதும், கடவுள் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்ல வைப்பதும் ஆகும்.  ஞானத்தை அளிக்கும் கடவுள் பயத்தை குழந்தைகளுக்கு கற்பிக்கவில்லை, மாறாக, துன்மார்க்கரின் ஆலோசனையின்படி நடக்கவும், பாவிகளின் வழியில் நிற்கவும், கேலி செய்பவர்களுடன் உட்காரவும் தூண்டப்படுகிறது (நீதிமொழிகள் 1:7; சங்கீதம் 1:1).

அடுத்த தலைமுறைக்கு நான் என்ன கற்பிக்கிறேன்?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download