மாட்டு தொழுவம்; அரண்மனை அல்ல

ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் விமானத்தில் பயணிக்கும் போது குழந்தை பிரசவித்துள்ளார். அப்பெண் வெளியேற்றப்பட்ட ஒரு அகதி (பிபிசி ஆகஸ்ட் 22, 2021). ஒரு விமானம் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு விசித்திரமான இடம் என்றால், மரியாள் தனது மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பிரசவித்ததும் ஒரு அசாதாரண இடமல்லவா. "பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்" (லூக்கா 2:12).

1) பணிவு:
தேவன் மனிதனாக மாறுவது அல்லது மாம்சமாகுதல் என்பது "தன்னை தாழ்த்துவதாகும்". திரித்துவத்தின் இரண்டாவதான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மனித குலத்தை மீட்பதற்காக மனிதனின் வடிவத்தை எடுக்கத் தம் மகிமை, சிம்மாசனம், அதிகாரம், வல்லமை, மகத்துவம் ஆகியவற்றை புறந்தள்ளி வைத்தார். இறையாண்மையுள்ள தேவனாக, அவர் தனது பணி மனிதகுலத்திற்கு சேவை செய்ய ஒரு 'வேலைக்காரன்' என்பதை நிரூபிக்கும் தாழ்மையான ரூபத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆம், வேலைக்காரன் அரண்மனையில் பிறக்க வேண்டியதில்லை.

2) சட்டமும் இரக்கமும்:
அரண்மனை என்பது அரசன் வசிக்கும் இடம் மற்றும் சில சமயங்களில் அவனது அரசவை நடக்கும் இடமுமாகும். ராஜா என்பவர் பொதுவாக சட்டத்தை வழங்குபவர், நீதியை வழங்குபவர் மற்றும் இரக்கம் காட்டுவது என்பதை தெரிவு செய்யலாம். இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிருபை மற்றும் சத்தியத்தின் உருவமாக வந்தார் (யோவான் 1:14). "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே" (2 கொரிந்தியர் 8:9). 

3) அணுகுவதற்கு எளிது:
அரண்மனை என்பது ஒரு வலிமையான, கம்பீரமான இடம், ஆடம்பரமும் நிகழ்ச்சிநிரல்களும் நிறைந்தது. நேர்எதிரானது, தொழுவம்; ஆம் அது ஒரு எளிய தாழ்மையான இடம். தேடி வருபவர்களை முகத்தலடித்தாற்போல் சாத்தும் அரண்மனை கதவுகள் இல்லை. ராஜாவைப் பார்க்க வருபவர்களைத் தடுக்க காவலர்கள் இல்லை. மேய்ப்பர்கள் போன்ற தாழ்மையான மக்களுக்கு அல்லது கிழக்கிலிருந்து வரும் ஞானிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. தேவாலயத்தில் கூட, குறிப்பாக மகா பரிசுத்த ஸ்தலத்தில், அவ்வளவு எளிதாக அணுக முடியாத நிலை இருந்தது.

4) ஆவிக்குரிய குறியீடு:
விலங்குகள் உணவு, ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்புக்காக ஒரு தொழுவத்திற்குச் செல்கின்றன. தொழுவத்தின் உள்ளே அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. தொழுவத்தில் இருக்கும் ஆண்டவராகிய இயேசு மனித குலத்திற்கு வாழ்வளிக்கும் ஜீவ அப்பம். ஆம்; அப்பம் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தது (யோவான் 6:35,51). ஆவிக்குரிய உணவும் பாதுகாப்பும் தேவைப்படுபவர்கள் எப்போதும் உள்ளே நுழைந்து இரட்சிப்பைப் பெறலாம். குறைந்தவர்கள், இழந்தவர்கள் மற்றும் தொலைந்தவர்கள் என யார் வேண்டுமானாலும் இரட்சிப்புக்காக இலவசமாக எளிதாக அணுகி பெற்றுக் கொள்ளலாம். 

தொழுவத்தில் பிறந்த மீட்பரில் நான் மகிழ்ச்சி அடைகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download